Pages

Tuesday, February 27, 2018

பங்குனி மாத இந்து சாதனம் பத்திரிகை!




யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை 130 ஆண்டுகளாக வெளியிடும் "இந்துசாதனம்" பத்திரிகையின் பங்குனி மாத இதழ்

காவாய் இந்து ஆதீனச்சிறப்பிதழாக...














































































Thursday, February 22, 2018

உங்கள் பெயர் P அல்லது R ல் ஆரம்பிக்கிறதா..? இதோ உங்களுக்கான சில சுவாரஸ்யத் தகவல்கள்

பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அதனை அவ்வளவாக சட்டை செய்யாது செல்பவர்களா நீங்கள்? இந்த தகவல் உங்கள் எண்ணத்தை மாற்றிடும். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.



ஆர் மற்றும் பி போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயருடையவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவர்கள் துலாம் ராசிக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் நேரடியாக இருக்குமென்பதால் எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவுகள் சூழவே இருப்பார்கள்.எல்லாரும் தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். சின்ன சின்ன தவறுகளுக்கு கூட அதிகம் வருந்துவர்.பிறரை ஈர்க்கும் தன்மை இவர்களிடத்தில் அதிகமுண்டு, அழகுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தங்களையும் தங்களைச் சுற்றியும் அழகாக வெளிப்படுத்த நிறைய மெனெக்கெடுவார்கள். கலை விஷயங்களில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும்.

உடல் நிலையில் அடிக்கடி எதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். சமூகத்துடன் எப்போதும் நெருக்கம் பாராட்டுவீர்கள்.சமூகத்தில் நடக்கிற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனக்கவலை கொள்வீர்கள். எந்த சின்ன விஷயத்திற்கு சட்டென உணர்சிவசப்படக்கூடியவராக இருப்பீர்கள்.

உங்களது மூளை அபாரமானதாக இருக்கும், மூளையின் செயல்பாடு வேகமாக இருக்கும். கணக்குப் புதிர்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது இருப்பு அனைவராலும் விரும்பப்படும்.எல்லாவற்றிலும் நேர்த்தியிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பீர்கள். எல்லாமே கச்சிதமாக, சொன்ன நேரத்தில் சொன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சட்டென கோபம் கொள்வதால் அடிக்கடி மனஸ்தாபங்கள் நிகழும்.



திருமண வாழ்க்கையில் அதீத இன்பம் வாய்க்காது. சண்டை சச்சரவுகளுடன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.இயற்கை தொடர்பான விஷயங்களை அதிகம் நேசிப்பர். அதிக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்.

வாக்குவாதங்களை தவிர்ப்பது இவர்களுக்கு நல்லது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, வாக்குவதாத்தின் அடிப்படையான சாதுர்யப் பேச்சு, மொழியறிவு இவர்களுக்கு சற்று குறைவு. அதோடு சட்டென அதிகமாக உணர்சிவசப்படுபவர்கள் என்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது.

அவ்வளவு எளிதாக தங்களுடைய தன்னம்பிக்கையை இழந்து விட மாட்டார்கள். தோற்கும் போதெல்லாம் இன்னும் ஒரு முறை முயற்சித்து பார்க்கலாமா என்பது தான் இவர்களது அடுத்த கேள்வியாக இருக்கும்.

உங்கள் வீட்டில் செல்வம் செழித்தோங்க வேண்டுமா? அப்படியானால் தயவுசெய்து இதைச் செய்யுங்கள்……


வீட்டில் செல்வம் பெருக என்னென்னவோ முயற்சி செய்து கொண்டிருப்போம். ஆனால் விட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கிவிட்டு, நேர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் புகும்படி சில வாஸ்து காரியங்களைச் செய்தாலே போதும் உங்கள் வீட்டில் பணமழை கொட்ட ஆரம்பிக்கும்.

அதிலும், வியாழக்கிழமைகளில் சில வாஸ்து விஷயங்களைப் பின்பற்றி வந்தீர்களானால் செல்வம் பெருகும்.வியாழக்கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, குளித்த பின், விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி வணங்க வேண்டும்.

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால், வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.வியாழக்கிழமைகளில் குருவை வணங்கி, முறையாக விரதம் இருந்து வந்தால், அவர்கள் செல்வந்தர் ஆகலாம்.சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை வைத்து, படைத்து வணங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகம் வந்து சேரும்.

வியாழக்கிமைகளில் வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதேனும் ஒன்றை வைத்து படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானமாக வழங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும்.வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வத்தை பெருக செய்வார்.

வியாழக்கிழமைகளில் ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால், அது உங்கள் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கச் செய்யும்.

வீட்டில் ஆஞ்சநேயரை வணங்கலாமா?இத படிங்க உண்மை உங்களுக்கே புரியும்!!

குறிப்பிட்ட ஆஞ்சநேயர் வடிவங்களை நாம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். சிலர் ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு. ஏனெனில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரை வழிபாடு செய்பவரும் திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவார் என்ற மூடநம்பிக்கை பரவி இருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.


ஆனால் உண்மையில் அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும் ஆவார். சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி மட்டுமல்ல ஒரு சிரஞ்சீவியும் ஆவார். பிரிந்து கிடந்த ராமன், சீதையை மீண்டும் ஒன்று சேர்த்தவர் வாயு புத்திரனான ஆஞ்சநேயரே ஆவார்.
இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தினால் உயிருக்குப் போராடிய லட்சுமணனை சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்து உயிர்ப்பித்தவரும் ஆஞ்சநேயரே. தமது நண்பன் சுக்ரீவனுக்கும் நல்வழி காட்டியவர் ஆஞ்சநேயரே.

நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூர்த்திகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். பஞ்சமுக ஆஞ்சநேயரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். ஆஞ்சநேயரின் வடிவங்களில் சஞ்சீவிராய ஆஞ்சநேயரே மிகவும் வலிமை மிக்கவர். இத்தகைய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வணங்கும்போது கட்டாயம் ராமபிரானின் படம் இருக்க வேண்டும்.

வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை நாம் சொல்ல வேண்டும். நமது அனைத்து விதமான கோரிக்கைகளையும் அவரிடம் வைத்து வணங்க வேண்டும். கோரிக்கைகள் ஏதுமில்லாமல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யக்கூடாது. அவ்வாறு கோரிக்கை இல்லாமல் செய்யும் வழிபாட்டால் வழிபாடு செய்பவர் ஆஞ்சநேயர் போல் பிரம்மச்சாரியாகவே இருந்து விட வாய்ப்புண்டு.

எனவே, அனுமனிடம் திருமணத்தடை நீக்குமாறு வேண்டுவது உத்தமம். ஆஞ்சநேயரிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். ராமனை துதிக்கும் மக்களின் துதியை கேட்பதற்காகவே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வாழ்ந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

Wednesday, February 21, 2018

திருமணமாகாத கன்னிப் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் அன்று கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் சீக்கிரமே திருமணம் நடைபெறும்.வைகாசி மாதத்தில் பூரணச் சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள்.

விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூசை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்து, நைவேத்தியம் சமர்ப்பித்து பூசிக்க வேண்டும். திருப்புகழ் கந்தர் சஷ்டிகவசம் கந்தர் அநுபூதி ஆகிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

பூசை மேற்கொண்ட தினத்தில் இரவில் பால் மட்டும் உண்டு விரதமிருந்தால் பூரண பலன் கிடைக்கும். கோவிலில் சென்று முருகனை அபிஷேக ஆராதனைகளுடனும் வழிபடலாம். முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது. சந்நிதியில் நெய் விளக்குப்போடுவது சாலச்சிறந்தது.

கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் சீக்கிரமே திருமணம் நடைபெறும்.

Wednesday, February 7, 2018

கல்விப் பொது தராதர சாதாரண மாணவர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு!



Apps Lanka software solutions Pvt Ltd மென்பொருள் நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டO/L Pass – Paper என்ற Android செயலி பற்றிய அறிமுகக் கருத்தரங்கு இன்று (7 .2 .2018) கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலும் நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் இந்த செயலியை கையாளும் முறை மற்றும் அதனுடைய பயன்பாடு குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த செயலி கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பகுதி 1 வினாக்களை பரீட்சை வடிவில் விடைகளுடனும் , உடனடியாக மதிப்பெண்களை பார்க்கும் வசதியையும் விருப்ப வினாக்களை தரவிறக்கம் செய்து வைத்து இணைய வசதி இல்லாமல் பயன்படுத்தும் வசதியையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மாணவர்கள் இந்த செயலியை https://play.google.com/store/apps/details?id=lk.appslanka
இதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.





Sunday, February 4, 2018

மாசி மாத இந்து சாதனம் பத்திரிகை!




யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை வெளியிடும், 130 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்துசாதனம் பத்திரிகையின் மாசி மாத இதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.