Pages

Thursday, April 27, 2017

உங்கள் சொந்தங்களின் மரணஅறிவித்தலை

உங்கள் சொந்தங்களின் மரணஅறிவித்தலை  யாழ்தீபம் இணையத்தளத்தில் பதிவேற்றுவதற்கு
500/= மட்டுமே  தொடர்புகளுக்கு  

0772111175
yadeepam@gmail.com
www.yarldeepam.com



Monday, April 24, 2017

add

விளம்பரம்செய்ய [Advertise with us ]




எமது தளத்தில் விளம்பரம் செய்ய ஆகக்குறைந்த கட்டணம் 500 ரூபா( ஒரு மாதம்). உள்ளடக்கம் அளவு காலம் என்பனவற்றினை பொறுத்து கட்டணத்தில் மாறுபாடு இருக்கும்!

மேலதிக தகவல்களுக்கு
yadeepam@gmail.com
0772111175
இற்கு தொடர்பு கொள்ளவும்

http://www.yarldeepam.com
——————————————-
720×90 : Top:      Rs 5 ,000 Per Month
468×90 : Zone 1: Rs 4000 Per Month [Below Latest news ]
780×90 : Zone 2: Rs 7000 Per Month [Above Tap News ]
468×90 : Zone 3: Rs 3000 Per Month [Above Editor Choice]

300×300: Top Corner: Rs 10 000 Per Month [Like Box place ]
300×300: Side: Rs 5 000 Per Month [Ads Area ]
300×150: Side: Rs 2 000 Per Month  [Ads Area ]

120 x90 : Rigt : Rs 2 000 Per Month

http://directory.ejaffna.lk : Advertisement Charges
——————————————

990×90 : Top:      Rs 10 ,000 Per Month
468×90 :  Rs 8000 Per Month [Middle Top  below Header]
250×250: Right: Rs 2000 Per Month
250×250: left: Rs 2000 Per Month
250×100: Right: Rs 2000 Per Month
250×100: leftt: Rs 2000 Per Month

Note:
1.Advertisement Design Charges from Rs 500
2.No Weekly Deal now
3.if you put Advertisement in both site then 25% Discount in Total Cost

———————————
அறிவித்தல்கள்
———————————-
எமது பிரத்தியேக அறிவித்தல் பகுதியில்  மரண அறிவித்தல்கள் .நினைவஞ்சல்கள் ,வாழ்த்துக்கள் பிரசுரிக்க

Friday, April 21, 2017

நீங்கள் அறிந்திராத மருதமடு அன்னையின் வரலாற்று புகழ்

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருதமடு அன்னையின் திருசுரூப வரலாறு. சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.
மருதமடு அன்னை01. 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம், யாழ்குடா பிரதேசங்கள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார்த்தீவு, போன்றன யாழ்ப்பாண இராட்சியமாக விளங்கின. அக்காலத்தில் யாழ்ப்பாண இராட்சியத்தை சங்கிலியன் மன்னன் ஆண்டு வந்தான்.
02. இந்தியாவின் தென்கரையோரங்களில் வசித்து வந்த கிறீஸ்தவர்கள் யாழ்ப்பாண இராட்சியத்தில் கிறீஸ்துவைப் பற்றி அறிந்திராத பாமர மக்களுக்கு வேதவசனங்களை சிறிது சிறிதாக போதிக்கலாயினர்.
03. இவர்கள் மூலமாக புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் வேதம் போதிக்கும் ஆற்றலையும், புதுமைகளையும், கேள்வியுற்ற மன்னார் வாசிகள், 1544 இல் இப்புனிதரை மன்னார்த் தீவுக்கு, வருமாறு ஓர் தூதுவர் மூலமாக ஒலை அனுப்பினர்.

04. புனித சவேரியார் திருவாங்கூரில் சமய அலுவல்களில் மும்முரமாக இருந்த காரணத்தினால் தமது நாமம் பூண்ட ஓர் குருவானவரை யாழ்ப்பாண இராட்சியத்திற்கு மன்னார் ஊடாக அனுப்பி வைத்தார்.
மருதமடு அன்னை05. சவேரியார் குருவானவர் மன்னார் தீவுக்கு வந்து, பலரை மனம் திருப்பி சத்திய வேதத்தை போதித்து மக்களின் மனதை வென்றமையினால் 600 இற்கும் அதிகமான மக்கள் இயேசுவில் நம்பிக்கை வைத்து வாழ்ந்த வேளையில் யாழ்ப்பாண அரசனான சங்கிலியனால் மதம்மாற நிற்பந்திக்கப்பட்டு மறுத்தவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதாக சரித்திரம் சான்று பகர்கின்றது.
06. யாழ்ப்பாண வைபவ மாலை எனும் நூலில் 1544 இல் சங்கிலிய மன்னன, மன்னார் கிறீஸ்த்தவர்களை சிரச்சேதம் செய்தபின் யாழ் சென்று சிங்கள, பௌத்த மதத்தினரையும், யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தியதாகவும் கூறப்படுகின்றது. (யாழ் வைபவ மாலை பக் -33 Cronicle madhu page 28)
07. 1582 இல் இராஜ பரம்பரையைச் சேர்ந்த இளம் பெண் டொன்னா கத்தரீனா கிறீஸ்த்தவ மதத்தைத் தழுவினார், மன்னாருக்கு வந்து சிறிதுகாலம் வேதத்தைப் பரப்பினாள். இவரின் தந்தையின் பெயர் கறளியத்த பண்டாறா, கண்டி அரசனான, இவர் பின்பு இராஜசிங்க அரசனால் முறியடிக்கப்பட்டார். டொன்னா கத்தரீனா, மன்னார் மக்களின் எளிய வாழ்வை விரும்பியவள். கபிரியேல் கொலோசா என்பவரின் விட்டில் வசித்து வந்தார். கிறீஸ்த்தவ மக்களுக்கு பெரிதும் உதவி செய்தவர். இவரின் தந்தையும், தாயும் கிறீஸ்த்தவ மதத்தைப் பின்பற்றி இறுதியில் திருகோணமலையில் இறந்தனர்.

08. இருப்பினும் இரத்தம் சிந்தப்பட்ட தற்போதைய தோட்டவெளி கிராமத்தில் புது வேகத்துடன் கிறீஸ்த்தவ வேதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதனால் 1583 இல் 26 கோவில் பங்குகளில் 43ஆயிரம் கிறீஸ்தவர்கள் மறைந்திருந்து கிறீஸ்துவிற்கு சாட்சிகளாய் விளங்கியதாக சரித்திரம் கூறுகின்றது.
மருதமடு அன்னை09. இவ்வாறு ஏற்பட்ட 26 கோவில் பங்குகளில் மன்னார், தள்ளாடி, திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள தற்போதைய மாந்தை லூர்த்துக்கெபி சிற்றாலயமும் அடங்கும்.
10. செபமாலை மாதாவென்று தற்போது அழைக்கப்படும் மருதமடு மாதாவின் உண்மையான சுரூபத்தின் ஆதி இருப்பிடம் மாந்தை திட்டியில் அமைந்துள்ள தற்போதைய லூர்த்துக்கெபி கோவிலாகும். 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் மன்னாருக்கு வந்தபோது மாந்தை பட்டினமும், திருக்கேதீஸ்வர கோவிலும் பாழ் அடைந்திருந்ததாகவும் 1560 இல் மன்னார் கோட்டையை டி.கொண்ஸ்ரன்டைன், டீ.பிறாங்கன்ஸ் என்பவர் தலைமையில் கட்டுவதற்கு இங்கிருந்து முருகை கற்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், சரித்திரம் சான்று பகர்கின்றது. (D. CONSTANTINE, D . BRANGANZA ) refer chronical> chapter II page 22 third para.
11. 1658 இல் மாந்தையில் உள்ள ஆரோக்கிய மாதாகோவில் டச்சுக்காரரின் ஆட்சியில் விழுந்ததினால் அங்குள்ள கிறீஸ்தவர்கள், மாதாவின் சுரூபத்தை வன்னிக்கு எடுத்துச்சென்றதாகவும், 1670 இல் மாந்தைக்கோவில் டச்சுக்காரருக்கு கூட்டம் கூடும் இடமாக மாற்றப்பட்டதாக யாழ் அரச அதிபர், திரு.ர்.நெவில் (NEVIL) தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், அத்துடன் 1670 இல் டச்சுக்காரர் பதித்த நிலக்கல்லை தான் கண்டெடுத்ததாக கூறியுள்ளார். (Codex Madhu 1888, Cronicle Madhu அத்தியாயம் 3 பக்-26)

12. 1669ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத்தீவை ஒல்லாந்தர் கைப்பற்றியபோது, மன்னார் தீவில் வாழ்ந்த கிறீஸ்த்தவர்களுக்கு எதிராக ஓரு கொடூரமான வேதகலாபனை ஆரம்பமாகியது. வண பிதா, மெய்சட் OMI ( MASSIET ) என்பவர் மடுத்தேவாலய சரித்திரப் புத்தகத்தில் (CODEX –HISTORICUS) 1886 இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “1,670 இல் மாந்தையில்” ஆரோக்கிய அன்னை எனும் பேரில் ஓர் கோவில் இருந்ததாகவும் அதை வண பிதா பெற்ரோ டீ பெற்றாங்கோ 1614 இல் கட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.( Our lady of Good Health built by. Fr. PEDRO DE BETANCO) Chronicle Chapter, II page 20 th second para
13. பல இந்தியக் குருக்கள் வள்ளம் மூலம் நாட்டைவிட்டு வெளியேறியமையினால், மன்னார், மாந்தை, ஆகிய இடங்களில் வாழ்ந்த கிறீஸ்தவர்கள் வேதத்தில் தளைத்திருந்த அக்காலத்து சங்கீத்தான், உபதேசியர், போன்றவர்கள் தலைமையில் இரவில் மறைவாக சிறு சிறு குழுக்களாக ஒன்று கூடி மெழுகுவர்த்தி உதவியோடு வேதத்தைப் பரப்பினர்.

14. இவர்கள் வேதகலாபனையிலிருந்து கிறீஸ்தவ மதத்தையும், மக்களையும், காப்பாற்றிக்கொள்ள செபமாலையை ஓர் ஆயுதமாக எடுத்துக்கொண்டனர்.
15. 1670ல் மாந்தை சிற்றாலயத்தைச் சேர்ந்த பக்தியுள்ள 20 குடும்பங்கள் ஒன்றுகூடி, மாந்தையில் வீற்றிருந்த செபமாலைமாதா சுரூபத்தை பாதுகாக்கும் முகமாக ஆலோசனை செய்ததாக சரித்திரம் சான்று பகர்கின்றது.
16. 1686 இல் வண.பிதா ஜோசவாஸ் முனிந்திரன் கோவாவில் இருந்து கடல் வழியாக பிரயாணம் செய்தபோது அத்தோணி புயலில் அகப்பட்டு மன்னார் கரையை அடைந்ததாகவும், இலங்கையில் வேதகலாபனை நடந்ததினால் பிச்சைக்காரர் வேடத்தில் மாறுவேடம் பூண்டு நம்பிக்கையுள்ள கிறீஸ்த்தவ வீடுகளில் தரித்து நின்றதாகவும், அவர் தன்னுடன் பூசைக்கல்லையும், கதிர்பாத்திரத்தையும் எடுத்துச்சென்றதாகவும் சரித்திரம் கூறுகின்றது. (வணபிதா கி. பெரேரா எழுதிய ஜோசவாஸின் சுயசரித்திரம் பக் – 44-47 CRONICAL MADHU PAGE – 87
17. மன்னாரில் இருந்து 1687 இல் ஜோசவாஸ் யாழ் சென்று தமது கிறீஸ்தவ வேதத்தை பரப்பினார். யாழில் திரு. போலோ டி பரேட் எனும்(PAULO DE PARROS) டச்சுக்காரர் 23-06-1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின் இவர் மறைவிடத்தில் தனது முதலாவது திருப்பலியை ஒப்புக்கொடுத்தார், பின்பு அங்கிருந்து சில்லாலை சென்று அங்குள்ள மூப்பனாரின் வீட்டில் தங்கியிருந்தார். இக்கட்டிடம் பின்பு திருக்குடும்ப கன்னியர் மடமாக திகழ்ந்ததாக சரித்திர ஏடுகள் கூறுகின்றன. (25 வருட கத்தோலிக்க வரலாறு செபப்புத்தகத்தில் வணபிதா சுவாமி ஞானப்பிரகாசியார் குறிப்பிட்டுள்ளார்)

18. இதன் பயனாக இவ் 20 குடும்ப அங்கத்தவர்கள் மாந்தையில் நிலை கொண்டிருந்த செபமாலைமாதா சுரூபத்தை ஒல்லாந்தரிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அதனை எடுத்துக்;கொண்டு கால் நடையாக அக்காலத்தில் கண்டி, இராட்ச்சியத்திற்குட்பட்ட அடர்ந்த யானை, புலி, காட்டினுடாக இராமேஸ்வரத்தில் இருந்து கண்டிக்குச் செல்லும் முன்னைய இராஜ பாதை, (தற்போதைய A14 பாதை) மூலமாக கண்டி அரசனின் கங்காவடியென்னும் புராதான குளத்திற்கு அருகேயுள்ள கிராமமொன்றிற்கு (தற்போதைய தட்சணாமருதமடு கிராமம்) தமது நீண்ட பயணத்தை செபமாலைமாதா சுரூபத்துடன் சென்றடைந்தனர்.
மருதமடு அன்னை19. அதன்பின் 2கி.மீ தூரத்திலுள்ள மருத மரங்களினால் சூழப்பட்ட சிறிய குளக்கரையைக் கொண்ட மருத கிராமத்திற்கு சுரூபத்தை எடுத்துச்சென்று வணங்கினர்.
20. அங்கு மாந்தையின் பரம்பரை கிறீஸ்தவர்கள் முதல்முறையாக திருச்சிலுவையை நட்டு செபமாலைமாதா சுரூபத்தை வைப்பதற்காக ஓலைகளினால் வேயப்பட்ட சிறு கொட்டிலை அமைத்து தமது வேதவைராக்கிய வித்தை விதைத்ததாக சரித்திரம் சான்று பகர்கின்றது.
21. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாண பட்டணத்தில் வேதகலாபனை காட்டுத்தீ போல் நாலா பக்கமும் பரவிக்கொண்டிருக்க, யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து வேதத்தில் வைராக்கியம் நிறைந்த கிறீஸ்தவ மக்கள் இடம்பெயர்ந்து- சுமார் 700 கிறீஸ்த்தவர்கள்- பூநகரிகடல் ஏரியைக் கடந்து வன்னிக் காட்டில் நுழைந்து புதுமையான விதத்தில், செபமாலை மாதாவின் சிறுகுடிலை நோக்கி தேவனால் அழைத்து வரப்பட்டனர்.
22. யாழில் இருந்த ஏழு இந்தியக் குருக்களும், 700 கிறீஸ்த்தவர்களும், பூநகரி கடல் ஏரியைக் கடந்து, காட்டு வழியாக நடந்து மன்னாரிலுள்ள, மடுத்தேவாலயத்தை வந்து சேர்ந்ததாக சான்றுகள் உள்ளன. (CODEX MADHU 1968 இல்)

23. கானகத்தின் நடுவே அமைதியும், சமாதானமும் நிறைந்த மருதமடு செபமாலை மாதாவின் பாதகமலங்களில் மன்னார், மாந்தை கிறீஸ்தவர்கள் அமைதியாக ஒவ்வொரு இரவும் செபமாலையை கரங்களில் ஏந்தி தம்மைக் காப்பாற்றுமாறு மாதாவை வேண்டினர்.
24. இவர்கள் மத்தியில் ஓர் போர்த்துக்கேய தளபதியின் மகளான லேனா என்பவளும் வந்திருந்தாள், இவள் கிறீஸ்துவின் மேல் அலாதியான பக்தியும், ஏனையோருக்கு முன்மாதிரியுமான சீவியத்தையும் வாழ்ந்து வந்தவள். யாழ் கிறீஸ்தவர்கள் இவளை “சந்தலேனா” அல்லது, “அர்ச்சிஸ்ட லேனா” என அழைத்து வந்தனர். யாழ் கிறீஸ்தவர்களும் மன்னார், மாந்தை கிறீஸ்தவர்களும் கானகத்தின் நடுவே தேவனின் அருளினால் ஒன்று சேர்க்கப்பட்டதை நாம் வாழ்நாளில் கண்ட பரவசம் என அக்கால கிறீஸ்த்தவர்கள் கூறியதாக சரித்திரம் கூறுகின்றது.
25. காலகதியில் லேனா எனப்படும் அப்பெண் மடுவில் இருந்த சுங்க அதிகாரியை மணம் புரிந்ததால். இவள் மாதாவின் பெயரால் தமது செல்வாக்கை பாவித்து மருதமடு மாதாவிற்கு சிறு கோவிலைக் கட்டுவித்தாள். வங்காலையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் அந்தோனியோ டீ மெலோ (Andonio de Mello ) மடுக்கோயில் சம்பந்தமான வழக்கில் (வழக்கு இல.6871) – 1875 இல் சாட்சியம் பகர்கையில் லேனா என்பவள் மடுக்கோவிலைக் கட்டியதாக இவர் சாட்சியம் கூறியுள்ளார்.(the Cronicle of Madhu) chapter IV page 32 ,first para
26. இச்செயலுக்காக அக்காலத்து கிறீஸ்தவர்கள் அவ்விடத்தை “சீலேனா மருதமடு” என்று அழைக்கலாயினர். அது இந்நாள் வரைக்கும் இப்புனித பூமிக்கு ஓரு பெயராக விளங்கி வருகின்றது.
27. கானகத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் வருகையை தொடர்ந்து அதன் சுற்று வட்டத்தில் விசசர்ப்பங்களின் தீண்டுதல்கள், வெகுவாக குறைவடைந்தன. காலப்போக்கில் மடுமாதாவின் தலத்து மண்ணை மக்கள் நம்பிக்கையுடன் எடுத்துச் சென்று தமது தீராத நோய்களை தீர்த்ததாக சரித்திரம் சொல்லுகின்றது. இச்செயல் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது.

28. வண பிதா றோமமிஸ் கிர்ச்சென் (FR. ROMMESS KIRCHEN) 1931 இல் எழுதிய புத்தகத்தில் கோவாவை சேர்ந்த ஓர் பரிசுத்த சுவாமி மடுக்கோவில் வளவில் புதைக்கப்பட்டதாகவும், அவரை கிறீஸ்த்தவர்கள் “சம்மனசு சுவாமி” என அழைத்ததாகவும், கூறப்படுகிறது. அவரின் பரிசுத்தமான வாழ்க்கையினால் அவர் வாழும்பொழுதே மக்கள் அவரை புனிதர் என அழைத்தனர். இவரை புதைத்த இடத்தின் மண்ணை பக்தர்கள் எடுத்துச்சென்று தமது குரோத வியாதிகளுக்கு மருந்தாக பாவித்ததாக சாஸ்த்திர ஏடுகள் கூறுகின்றன, (1697 – 1721 காலத்தில் வணபிதா பெற்ரோ பிராடோ FR. BEDRO FRERDO) முதல் முறையாக இம்மண்ணை ஆசீர்வதித்ததாக ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது,(CRONICAL MADHU PAGE 36).
29. 1656 தொடக்கம் 1686 வரை டச்சுக்காரரின் கொடுங்கோல் ஆட்சியினால் இலங்கையில் குருக்கள் ஒருவரும் இருக்கவில்லை. அக்காலத்தில் விசுவாசமுள்ள பொது நிலையினரே வேதத்தை வளர்த்து வந்தனர்.
30. பின்பு கோவையில் இருந்து ஓறேட்ரோரியன் சபையைச்சேர்ந்த புனித ஜோசவாஸ் முனிவரும் அதன்பின் சில தியான சம்பிரதாய குருக்களும், இலங்கைக்கு வந்து சில கத்தோலிக்க மீசாம்களை ஆரம்பிக்கத் தொடங்கினர்.
31. 1695 இல் இலங்கைக்கு வந்த தவமுனிவர் பேதுரு பெற்றாஸ் என்பவர் மடுவிற்கு பொறுப்பாளராக இருந்தார், 1706 இல் மருதமடு தலை மீசாமாகவும், பேராலயமாகவம், விளங்கியதாக சரித்திரம் கூறுகின்றது.
32. வணபிதா ஜோசவாஸ் 28-02-1697 இல் வணபிதா பெற்றோ பிராடோவை மாதோட்ட பங்கிற்கு (மன்னார், வன்னி, பூநகரி, யாழ்) பொறுப்பாக நியமித்தார். இவரின் காலத்தில் யாழ்ப்பாணத்தை பிடிப்பதற்காக சாத்தானுக்கு உயிர்களை பலி கொடுப்பதுண்டு. இவ்மூடச்செயலை வணபிதா பெற்றோ பிராடோ முறியடித்து கத்தோலிக்க விசுவாசிகளின் துணைகொண்டு யானைகளைப் பிடித்து தொழில் செய்ததாக சான்றுகள் பகர்கின்றன, (ஒரோட்டோரியன் பக்-10 வணபிதா பெற்றோ பெராடோ பக்- 100 Cronical madhu பக்-47)
33. முதல் தடவையாக ஆவணி 8 ஆம் திகதி 1705 இல் ஆயிரக்கணக்கான மடு யாத்திரியர்கள், இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து, மடுத்திருவிழாவில் கலந்துகொண்டனர், வணபிதா ஜோசவாஸ் தலைமையில் திருப்பலிப்பூசை நடைபெற்றது.
34. அதன்பின் எட்டு குருக்கள் ஒன்றுகூடி, ஆவியின் வேண்டுதலின் பின், இலங்கையின் திருச்சபையை எட்டாக பிரித்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பை எட்டுக் குருக்களுக்கு கையளித்தனர்.
35. இதில் ஒன்றாக வண பிதா. பெற்ரோ பெராடோ என்பவர் சீலேனா மருதமடுவிற்கும், சகல மாதோட்ட மறைமாவட்டத்திற்கும், பொறுப்பை எற்றுக்கொண்டார்.
36. மேலும் வணபிதா, ஜோக்கிம் கொண்சல்வாஸ், ((JACOME GONSALVAZ ) மன்னார், அரிப்பு, முசலி, இழுப்பைக்கடவை, புளியங்குளம், கோவில்குளம், தம்பட்ட முறிப்பு, வண்ணாகுளம், பல்லவராயன்கட்டு, இலுப்பைக்குளம், ஆவரங்குளம், அதனோடு அண்டியள்ள கிராமங்களுக்கும், நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக சரித்திரம் கூறுகின்றது.
37. 16-01-1711 இல் ஓரு வெள்ளிக்கிழமை இரவு, வணபிதா ஜோசவாஸ் என்பவர், தனது 61 வது வயதில் கண்டியில் காலமாணார், இவர் வகித்த தலைமைப் பொறுப்பிற்கு வணபிதா ஜோசப் மென்சிஸ் (Fr. JOSEPH MENEZES) ) என்பவர் நியமிக்கப்பட்டார்.

38. ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்ததும், இலங்கை கத்தோலிக்கர்களுக்கு விடிவு காலம் ஆரம்பமாகி வேதகலாபனைகள் சற்று ஒழிந்து கத்தோலிக்க மதம் மீண்டும் தளைத்தோங்கத் தொடங்கியது.
39. இலங்கையின் நாலாபுறத்திலும் இருந்து கானகத்தில் வீற்றிருக்கும் மருதமடு அன்னையை காண பலபக்தர்கள் நூற்றுக்கணக்கில் வரத்தொடங்கினர்.
40. கோவிலில் இடமின்மையை கண்ணுற்ற, மன்னார் வழக்காடு கோட்டில் (நீதிமன்றில்) சக்கிடுத்தாராகவிருந்த பறங்கியரான மோஜீஸ் என்பவர். 1823 இல் ஒரு சிறுகுடிசைக் கோவிலை களிமண்ணினால் கட்டிவித்தார், இது குதிரை லாடன் வடிவத்தில் மூன்று பக்கச் சுவர்களுடன் 8 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. அதன் நடுவே பீடத்திற்காக ஒரு சிறுமேசை அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு பின்புறத்தில் குருமாருக்கென சிறு அறை இருந்தது.
41. சிறிது காலத்தின்பின் இந்தியாவிலுள்ள கோவை குருமாரின் சபை கலைக்கப்பட்டு கிறீஸ்தவ மதம் வளர்;ச்சி குன்றியது.

42. சுமார் 300, அண்டுகளாக இலங்கைத் திருச்சபை இந்தியாவிலுள்ள கொச்சின் மறைமாவட்டத்தினால், நிர்வகிக்கப்பட்டு வந்தது, 1834-12-03ம் திகதி 16ம் கிறகோரி பாப்பாண்டவரினால் இலங்கை திருச்சபை, கொச்சினில் இருந்து பிரிக்கப்பட்டு தனிமறை நாடாக பிரகடனப்படுத்தப்பட்டு ஒரட்டேரியன் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
43. கோவாவைச் சேர்ந்த வண.பிதா பிரான்சிஸ் சவேரியார் இலங்கைக்கு முதலாவது விக்கார் அப்போஸ்த்தலிக்கராக நியமிக்கப்பட்டார். இவர் கிறீஸ்த்துவிற்கு சாட்ச்சியாய் பெரும் சவாலுடன் இலங்கையில் சேவை புரிந்து இறுதியில் 1835 இல் காலமாணார்.
44. அதன்பின் வண.பிதா ஜோசவாஸ் முனிந்திரர் இலங்கையின் விக்கார் ஜென்றலாக நியமிக்கப்பட்டார். இவரின் அயராத முயற்சியினால் மேலும் ஜந்து மிசனரி குருக்கள் கோவாவில் இருந்து 14-07-1705 இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் வணபிதா ஜோசப் டீ. ஜேசு மேரி, வணபிதா ஜேகம் கொண்சல்வாஸ், வணபிதா மானால் டீ. மிராண்டா, வணபிதா மைக்கல் டீ. மெலோ, வணபிதா பிரான்சிஸ்கோ டீ. யேசு. வண.பிதா ஜோசவாஸ் இக்குருக்களை ஆரத்தழுவி மடுவில் நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுத்ததாக சான்றுகள் பகர்கின்றன.
45. 1846 இல் இலங்கையின் வடபகுதி விக்காரியமாக (மறைமாவட்டம்) அமைக்கப்பட்டு, அதி. வந்த. பெற்றக்கிளி ஆண்டகை விக்கார் அப்போஸ்தலிக்க நியமனம் பெற்றார். இவர் தமக்கு உதவியாக அமலோற்பவ மரியநாயகி சபையாரை அழைத்திருந்தார். இச்சபையைச் சேர்ந்த செமேரியா மேற்றாணியாரால் மடுத்திருப்பதிக்கு அதிக திருத்தங்கள் செய்யமுடியவி;ல்லை.
46. 1868 இல் அக்காலத்து வடமாகாண மறைமாவட்டத்திற்கு அதி வந்த. பொஞ்சீன் ஆண்டகை நியமிக்கப்பட்டார். இவர் 1870 இல் ஒவ்வொரு வருடமும் ஆடித் திங்கள் இரண்டில் மடு வருடாந்த உற்சவம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார், அன்று தொடக்கம் இன்று வரை, ஆடி 2ம் திகதி திருவிழா மடுத்திருப்பதியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசியார், தனது சரித்திர ஏட்டில் மடு சேத்திரத்தில் பதினாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
47. 1872 இல் மடுத்திருப்பதியை முதல் முறையாக தரிசித்த அதி. வந்த. பொஞ்ஜீன் ஆண்டகை களிமண்ணினால் கட்டப்பட்டிருந்த சிறியகோவிலை கண்ணுற்று, வேதனையுற்று, ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு கன்னிக்கல் ஒன்றை 1872 இல் ஆவணி திங்கள் 8 இல் நாட்டினார்.
48. அதி. வந்த. பொஞ்ஜீன் ஆண்டகையால், தொடங்கப்பட்ட மடு ஆலய கட்டுமான பணி அதி. வந்த. மெலிசன் ஆண்டகை, காலத்தில் தொடரப்பட்டு பின்பு அதி. வந்த. யூலன் ஆண்டகையின் காலத்தில் முற்றுப்பெற்றது.

49. இதனைத் தொடர்ந்து அழகான கோவில் முகப்பும், விசாலமான குருமனையும், நற்கருணை சிற்றாலயமும், லூர்த்துக்கெபியும், அடுத்தடுத்து கட்டப்பட்டன. அருகில் உள்ள குளத்தை ஆழப்படுத்தி பக்தர்கள் நீராடுவதற்கும், குடிப்பதற்கும், பல குடிநீர் கிணறுகளும் கட்டப்பட்டன.
50. 1900 ஆம் ஆண்டுகளில், அரச ஊழியர்கள் தங்குவதற்காகவும், தமது கடமைகளை செய்வதற்காகவும், ஓர் அரச விடுதியும், அருட்சகோதரிகளின் சேவைகளுக்காக ஓர் கன்னியர் மடமும், பக்தர்களின் நலன்கருதி நோயாளர்கள் தங்கும் வைத்தியசாலையும், வெளி உலகுடன் தொடர்புகொள்ள தபால் தொலைபேசி காரியாலயமும், திருவிழாக் காலங்களின்போது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸ் காரியாலயமும், நீதிமன்றமும், மடுச்சுற்றாடலில் அமைக்கப்பட்டன.
51. பின்னர் அதி. வந்த. புறோ ஆண்டகை, இப்பதியை மக்களின் யாத்திரை ஸ்தலமாக அங்கீகரிக்கச் செய்ததுடன் மடு அன்னையின் பழமை வாய்ந்த சுரூபத்திற்கு முடி சூட்டிவிக்க ஆரம்ப முயற்ச்சிகளை மேற்கொண்டார்.
52. இவரைத் தொடர்ந்து அதி. வந்த. கியோமார் ஆண்டகை, தமது மறைமாவட்ட பணியை மடு அன்னையின் முடிசூட்டு விழாவுடன் ஆரம்பித்தார். இவர் மடுத்தேவாலயத்தின் முற்பகுதியை விசாலமாக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பிற்பகல் ஆராதனைகளில் முற்றவெளியில் இருந்து பங்குபற்றுவதற்கு வழி சமைத்ததுடன் இயேசுநாதரின் சிலுவையில் அறையப்பட்ட திருச்சுரூபம், பற்றிமா அன்னையின் திருக்சுரூபம் போன்றவற்றையும் மடுத்திருப்பதியில் நிறுவினார்.

53. ஜந்து ஆண்டுகள் அரிய சேவையின்பின் முதுமை காரணமாக யாழ் மறை மாவட்டத்தையும், மருதமடுத் திருத்தலத்தின் பாதுகாப்பையும், அதி. வந்த. எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையிடம் ஒப்படைத்தார். இவரின் காலத்தில் மடுமாதாவின் பக்தி இலங்கையின் பல்வேறு மறைமாவட்டத்திற்கும் விரைவாக பரவலாயிற்று.
54. 1924ம் ஆண்டு ஆடித்திங்கள் பரிசுத்த பாப்பரசர் 11ம் பத்திநாதரின் பிரதிநிதியாக கொழும்புக்கு வருகைதந்த அதி. வந்த ஆண்டகை ஆஷா குடேற், அவர்கள் மாதாவின் சிரசிலும், கரங்களில் ஏந்தியிருந்த தேவபாலனின் சிரசிலும், வைரகற்கள் பதிந்த இருதங்க முடிகளையும் சூட்டினார்.
55. அவ்வேளையில் திருநாள் திருப்பலியை. முன்னாள் யாழ் ஆயர் கியோமார் ஆண்டகை, நிறைவேற்றியதுடன், தூத்துக்குடி ஆயர் அதி. வந்த றோச் ஆண்டகை மக்களைக் கவரும் வகையில் மாதாவின் புதுமைகளைப் பற்றி பிரசங்கித்தார். இந்நிகழ்ச்சிக்கு 150 ஆயிரம் மக்களும், 50ற்கும் மேற்பட்ட இலங்கை இந்திய குருக்களும், அக்காலத்தில் இருந்த யாழ், கொழும்பு, கண்டி, காலி, மறைமாவட்ட ஆயர்களும், பக்திப் பரவசத்துடன் முடிசூட்டு விழாவில் பங்கு பற்றியதாக சரித்திரம் கூறுகின்றது. இலங்கையிலுள்ள பல தேவாலய மணிகள் ஆர்ப்பரிக்க, பீரங்கிகள் முழங்க, மருதமடு அன்னையின் கீதங்கள் வானொலியில் ஒலிக்க, பல்லாயிரம் மக்களின் கனவு அன்று நனவாகியது.

56. 1944ம் ஆண்டு ஆவணி 25ல் மருதமடு அன்னையின் தேவாலயத்தை அபிஷேகம் செய்ய மக்களும் ஆண்டகைகளும் சித்தம் கொண்டமையினால், 2வது மகாயுத்த காலம் நிலவியபோதிலும் வெகுபக்தி விமரிசையாக 30 ஆயிரம் மக்கள் கலந்துகொள்ள ஆலயம் அபிஷேகம் பண்ணப்பட்டு புதிய சலவைக்கல் பீடத்தில் நன்றித் திருப்பலியை கியோமோர் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்,
57. அமலோற்பவ மரியநாயகி சபைக்குருமார் இலங்கைக்கு வந்து தொண்டாற்றிய நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக அதி. வந்த. கியோமோர் ஆண்டகையின் தலைமையின்கீழ் மடு அன்னையின் திருச்சுரூபம் “கன்னிமரியாள் ஒர் பிரசங்கி” என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாண மேற்றாசனத்தில் உள்ள ஒவ்வொரு விசாரனைப் பங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக ஒவ்வொரு பங்கிலும் இருதினங்கள், செபதபங்கள் அனுசரித்தும், மக்கள் பயபக்தியுடன் தமது மீசாம்களை அலங்கரித்தும், மனம் திருப்புதலுக்கான முயற்சியாக இவ்வருகையை ஆயத்தம் செய்தனர்.
58. இம் மாதாவின் யாழ் பவனி பங்குனி 15ம் திகதி தொடக்கம் வைகாசி 5ம் திகதி வரை நடந்தேறியது. இந்த 50 நாட்களிலும் சுமார் 80 பங்குகளில் மாதாவின் தரிசனம் கிடைத்ததை கிறீஸ்தவர்களும், பிறசமயத்தவர்களும் பெரும்பேறாக கருதினர்.

59. இக்காலப்பகுதியில் சுமார் 51 ஆயிரம் கத்தோலிக்க மக்கள் தங்களை தேவதாயாருக்கு காணிக்கையாக்குவதற்காக பத்திரங்களில் கையொப்பமிட்டு மடு அன்னையின் திருப்பாத கமலங்களில் வைத்ததாக சரித்திரம் சான்று பகருகின்றது.
60. 1949 இல் மருதமடு தாயாரின் முடிசூட்டு விழா 25 வருடங்களை பூர்த்தி செய்தது. அவ்வாண்டில் யாழ் ஆயரான அதி. வந்த. கியோமோர் ஆண்டகை அபிஷேகம் செய்யப்பட்ட வெள்ளிவிழாவும் மடுவில் நிகழ்ந்தது, இவ்வைபவத்தில் 150 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டதுடன், இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 2.00 மணி வரை நடைபெற்ற வேண்டுதல் வழிபாட்டில், ஐம்பதாயிரம் யாத்திரிகர்கள் கலந்துகொண்டு தமிழிலும், சிங்களத்திலும், இலத்தீன். மொழியிலும் மன்றாடியதாக சரித்திரம் கூறுகின்றது.
61. 1950 இல் மடுத்தேவாலயம் இரண்டு பெரிய மின்பிறப்பாக்கியின் மூலம், ஒரு சதுர கி.மீ க்கு மின்னொளியூட்டப்பட்டு ஜோதி மயமாக காட்சியளித்தது.
62. 1963 இல் மன்னாரில் ஏற்பட்ட கடும்புயல் காரணமாக, மடுத்தேவாலயமும், அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டு மரங்களும், பெரும் சேதத்திற்கு உள்ளாயின.
63. வண பிதா, பிறோகான் 1950 இல் தனது அரிய முயற்ச்சியினால், வெளிநாட்டில் இருந்து மாபிளினால் தயாரிக்கப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சுரூபம் இரண்டைத் தரிவித்து, பெரிய சுரூபத்தை மடுமாதா தேவாலயத்தின் முகப்பிலும் ( PORTICO) சிறிய சுரூபத்தை மடுறோட், . மன்னார் – மதவாச்சி, சந்தியில் அமைந்துள்ள நுழைவாயிலிலும், ஸ்தாபித்ததாக சான்றுகள் காணக்கிடக்கின்றன.
64. மடுதேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்படும், நிதிகள் யாழ் மேற்றாசனத்திற்கு உட்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதாக நம்முன்னோர்கள் சான்று பகர்கின்றனர்
65. 1974 இல் ஆடித்திங்கள் 2ம் திகதிக்கு முன்னர் மடுஅன்னையின் மகுட அபிஷேக பொன்விழாவை முன்னிட்டு, மடு அன்னையின் திருச்சுரூபம் யாழ் மேற்றாசனத்தில் சகல விசாரனைப் பங்குகளுக்கும் திருப்பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது.

66. இப்பவனியின் அச்சாரமாக பரிசுத்த தந்தையால் 1975ம் ஆண்டு புனித ஆண்டாக தெரிந்தெடுக்கப்பட்டு “ஒப்புரவாக்குதலும், கிறீஸ்தவவாழ்வை புதுப்பித்தலும்” என்ற மையக்கருத்தில். ஒவ்வொரு பங்கிலும் ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று அறிவுரைகள், ஒப்புரவாதல், நற்கருணை வழிபாடு, அன்னைக்கு கூட்டுவழிபாடு, போன்றவற்றினால் மக்கள் மத்தியில் ஒர் உளமாற்றம் ஏற்பட்டது. பொன்விழா, திருப்பலியின்போது கொழும்பு அதி. வந்த. மேற்றாணியாரும் இலங்கையின் 1வது கருதினாலுமாகிய அதி. வந்த. தோமஸ் கூறே ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
67. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களின்போது. கத்தோலிக்கர் அல்லாத பிறசமய யாத்திரிகர்களும், மடுமாதாவின்மேல் நம்பிக்கை வைத்து வேண்டுதல்களை மேற்கொள்வது தற்போதும் நடைபெற்று வருகின்றது. மேலும் “பாவிகளுக்கு அடைக்கலமும்” “கிறீஸ்த்தவர்களுக்கு தஞ்சமுமாய்” மடுஅன்னை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அத்துடன் திருவிழாக்காலங்களில் காலை தொடக்கம் மாலை வரை பல குருமார் பாவசங்கீர்த்தனம் கேட்பதில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.
68. திருவிழாக்காலங்களின் போது பக்தர்கள் தமது தேவைகளை உணர்த்தவும் நேர்த்தியை நிறைவேற்றவும் பல வெளிப்படையான அடையாளங்கள், செயல்களில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது. ஒருசில சிங்கள யாத்திரியர்கள் மடுத்திருத்தலத்தை தரிசிப்பதற்காக தங்களது வீடுகளில் மண்ணினால் பெரிய உண்டியலை செய்து அதில் ஒறுத்தல் மூலமாகவும், தமது வருவாயில் ஓர் பங்கினை சேகரித்தும், நிதி சேர்த்து அந்நிதியை அடுத்த யாத்திரைக்கு செலவாகப் பாவிப்பதும் உண்டு.
69. தேவாலயத்தின் இடது பக்கத்தில் மெழுகுதிரி, செபமாலை, வரவணிக்கம், மன்றாட்டுப் புத்தகங்கள், புகைஞ்சான். நேர்த்திக்கடன் வேண்டுதல் பொருட்களான. குழந்தை உருவம், தொட்டில், கை, கால், போன்றனவும். ஓலைப்பெட்டிகளில் மடுமாதாவின் ஆயுள்வேத மூலிகைகள், போன்றவை பக்தர்களின் தேவைக்காக விற்பனை செய்யப்படுகின்றன.
70. கோவிலின் உள்ளே உள்ள திருச்சிலுவைப்பாதை ஸ்தலங்களில் மக்கள் சிலுவைப்பாதை செய்வதிலும், கோவிலின் நடுவினில் முழங்காலால் நடப்பதையும். சுற்றுப்பிரகாரத்தின்போது. கடலைப்பொரி, பூக்கள், போன்றவற்றை கீதங்கள்பாடி, தூவுவதையும், சுரூபக்கூட்டுக்கு கீழ்பக்கத்தால் கடப்பதையும் நம்பிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
71. மடுத்தேவாலயத்தை சுற்றியுள்ள 50 ஏக்கருக்கு மேற்பட்ட அடர்ந்த மரங்களின் கீழ் மக்கள் கூடாரங்கள் அமைத்து, தற்காலிக கொட்டகைகள் அமைத்து தங்குவதும், மூவேளை உணவை கூட்டாக சமைத்து சந்தோஷமாக உண்பதிலும். தமக்கு அருகிலுள்ள அறிந்திராத மக்களுடன், பகிர்ந்து மகிழ்வதையும் காணக்கூடியதாக இருக்கும்.
72. சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீரை குறிப்பிட்ட நேரத்தில் வழங்குவதிலும். உணவுச்சாலைகள் அமைத்து உணவுத்தேவையை பூர்த்தி செய்வதிலும், சுகாதாரத்தை காலையும், மாலையும் பேணுவதிலும், மடு பரிபாலன சபையும், மடுபிரதேச செயலாளரும், மடு உள்ளுராட்ச்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் ஈடுபட்டிருப்பதையும் காணலாம்.
73. இத்துடன் பல பாடசாலை சாரணர்களும், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவினரும், ஏனைய தொண்டர் அமைப்பினரும் பொதுமக்களை வழிப்படுத்துவதிலும், தற்காலிக மருத்துவமனை, அரச நிர்வாகம், நீதிமன்று, தபாற்காரியாலயம், போக்குவரத்துச் சேவை காரியாலயம், புகையிரத நிலைய காரியாலயம், போன்றனவும் திருவிழாக்காலங்களில் சிறப்பான சேவையை ஆற்றிவந்ததை காணக்கூடியதாக இருக்கும்.
74. 1990 முன் மடு வீதியில் அமைந்துள்ள மடுறோட், புகையிரத நிலையம், இலங்கையின் மிக நீண்டதொரு புகையிரத மேடை, கொண்டதாக அமைந்திருந்ததை நாம் அறிவோம். ஒரு நாளில் நான்கிற்கு மேற்பட்ட விஷேட புகையிரதங்கள், அதிக பிரயாண பெட்டிகளை கொண்டதாக மடுவிற்கு வருகைதந்ததும், மடு வீதியில் அமைந்துள்ள தற்காலிக பேரூந்து ஸ்தானத்தில் இருந்து ரயில் இணைப்புச் சேவைகள் மடுக்கோவிலுக்கு நடைபெற்றதும் உண்டு.
75. திருத்தலத்தின் புனிதத்தை பேணுவதற்காக மதுபானம் பாவித்தல், புகைப்பிடித்தல், போதைப்பொருள் பாவித்தல், துர்நடத்தையில் ஈடுபடுதல், முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது, கேளிக்கைகள், களியாட்டங்கள், மடு நிர்வாகத்தினால் முற்றாக தடைசெய்யப்பட்டு மடுத்திருத்தலம் உணவு, உடை, உறையுள், பக்தி, பரவசம் போன்றவற்றிற்கு மாத்திரம் உட்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
76. அயல்கிராமங்களில் உள்ளவர்கள் நேர்த்திக்கடனுக்காக இரண்டு, மூன்று, நாட்கள் கால் நடையாக நடந்து கூட்டம் கூட்டமாக “ஆவே ஆவே மரியா” “வாழ்க வாழ்க மரியே” என்னும் கீதத்தைப்பாடிக்கொண்டு மடுத்திருப்பதியை வந்து அடைவதை தற்போதும் காணக்கூடியதாகவுள்ளது.
77. மடு கிராமசேவகர் பிரிவு சுமார் 28.93 சதுர கி.மீ இடப்பரப்பை கொண்டுள்ளது. இதில் மடுத்தேவாலயம், மடுபெரும் காடு, கொக்குடையான், சின்னப்பண்டிவிரிச்சான், போன்ற இடங்கள் அடங்கும், 8 சதுர கி,மீ இடப்பரப்பில் அமைந்துள்ள அடர்ந்த காட்டினி;ல் கொடிய விலங்குகளின் மத்தியில் மடுமாதா எழுந்தருளி இருப்பதினால். மடுமாதாவை கானகத்தின் கன்னி என அழைப்பர்,
78. 2010 இல் மடுத்திருத்தலத்திற்கு மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 1சதுர கி.மீ பரப்பிற்கு புனிதபூமி மின் ஒளியினால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
79. திருவிழாக்காலங்களில் காலை 5.00 மணியானதும், திரிகால மணி அடித்து விடுதிகள்தோறும் கேட்கும்படி ஒலிபெருக்கி மூலம் திரிகாலச்செபம் சொல்லப்படும். மக்கள் பாவனைக்காக குழாய் குடிநீர் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகிக்கப்படும். காலை 5.30 தொடக்கம் 7.30 வரை அடுத்தடுத்து திருப்பலி பூசைகள் நடைபெறும். கோவில்களிலும் ஆறு சிற்றாலயங்களிலும் உள்ள பன்னிரண்டு பீடங்களில் நாற்பது குருமார்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பார்கள். பாவசங்கீர்த்தனம் காலை 8.00 தொடக்கம் 1.00 மணி வரையிலும் பிற்பகல் 3.00 தொடக்கம் 7.00 மணிவரை மும்மொழிகளில் கேட்கப்படும்.

80. 1993ல் மடுகோவிலின் பரிபாலகராக இருந்த வண. பிதா பி.ஜேசுராஜா அடிகள் 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் படங்களை மடுக்கோவிலின் வளாகத்தில் அமைத்து பக்தர்களின் ஆன்மீக தாகத்தை தீர்த்து வைத்தார்,
81. 2005ம் ஆண்டில் வண. பிதா பிலிப் அடிகளாரினால் மடுத்திருத்தலத்தின் மேற்கு எல்லையின் சின்னப்பண்டிவிரிச்சான் சந்திக்கு அருகாமையில் சிறிய நுழைவாயில் ஒன்று அழகுற அமைக்கப்பட்டது.
82. சமாதானத்தை வேண்டி அணையா தீபம் ஒன்று மன்னார் ஆயரினால் மடுமாதாவின் உள் பீடத்தில் 2003ம் ஆண்டு ஏற்றி வைக்கப்பட்டது.
83. 1999ம் காலப்பகுதியில் இராணுவம் மடுக்கோவில் பகுதியை கைப்பற்றும் முகமாக போராளிகளுடன் செல்தாக்குதலில் ஈடுபட்டபோது, மடு அன்னையின் சிற்றாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொது மக்கள் 43 பேர் பலியாகிய துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்றது. இதன்பின் ஆயர் அவர்களினால் கோவில் மந்திரிக்கப்பட்டு மீண்டும் அபிஷேகம் செய்யப்பட்டது.
84. போரின் உச்ச கட்டத்தில் 2008 ஆரம்பப்பகுதியில், போராட்டத்திற்காக இளைஞர்களை சேகரிக்க தொடங்கிய காலப்பகுதியில் வயது வந்த ஆண், பெண், இளைஞர், யுவதிகளை வைத்திருக்கும் தாய்மார்கள், மரியன்னையை நம்பி தமது பிள்ளைகளை அக்காலத்தில் மடு பரிபாலகராக இருந்த வண. பிதா எமிலியானுஸ்பிள்ளையிடம் கையளித்திருந்தனர். இப்படியாக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை இரவு, பகலாக பாதுகாத்த பெருமை மடுமாதாவிற்கே உண்டு.
85. 2010ம் ஆண்டில் சிலுவைப்பாதை ஸ்தலங்களின் சிலைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவை மன்னார் ஆயரினால் ஸ்தாபிக்கப்பட்டன.
86. இலங்கையின் 2வது கருதினாலான அதி. உயர் கலாநிதி மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் 15-08-2011 காலப்பகுதியில் மடுத்திருப்பதியை தரிசித்து தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.
87. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகவும் மடுத்திருப்பதியை அரசியல் மயப்படுத்தலின்கீழ் உல்லாசப் பயணிகளை கவரும் உல்லாச புரியாக, சந்தைப்படுத்தல் இடமாக மிளிர்வதை இலங்கை கத்தோலிகத் திருச்சபை என்றுமே விரும்பவில்லை.
88. மடுகுளம் ஆழமாக்கப்பட்டு கூடிய மழைநீரை சேகரித்து வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டள்ளது, மடு ஆலயத்தைச் சுற்றி பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கிணறுகள், குளத்தின் வரம்பிற்குள்ளும் ஏனைய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன, 1983 இல இலங்கை அரசினால் (By hon president premadasa) ஆயிரம் மலசல கூடங்கள் பக்தர்களின் நலன்கருதி கட்டிக்கொடுக்கப்படடள்ளன.
89. பக்தர்களின் நலன்கருதி நூற்றுக்குமேற்பட்ட நிரந்தர, தற்காலிக, விடுதிகள் ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
90. போரின்பின் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு மீள்குடியேறியமையினால் சின்னப்பண்டிவிரிச்சான், பெரியபண்டிவிரிச்சான், தட்சணாமருதமடு, மடுறோட், போன்ற மடுவை அண்டிய கிராமங்களில் தேவாலயங்கள் புனரமைக்கப்பட்டு, மக்கள் வழிபாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளன,
91. 2007ம் ஆண்டுக் காலப்பகுதியில் மன்னார் மக்கள் மடுத்தேவாலயத்திற்கு மடுவீதியினால் செல்வதற்கு முதலில் அனுமதிக்கப்பட்டு, பின் தடைசெய்யப்பட்டது, பயணிகளின் வசதிக்காக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் மடுவீதியில் பிரயாணிகள் தங்கும் மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தது.
92. மடுவீதியின் நுளைவாயிலின் அருகாமையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மடு அன்னையின் திருச்சுரூபம் ((marble statue ) அவ்வீதியால் போகும் பாதசாரிகளுக்கும், பக்தர்களுக்கும், ஓரு கலங்கரை விளக்காக திகழ்கின்றது.
93. 2009ம் ஆண்டுகளில் மடுவீதியின் நுளைவாயில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த மடுத்தேவாலயத்தின் வரைபடத்தை ஒத்த நுளைவாயில் ஒன்று பெரும் பணச்செலவில் ஸ்தாபிக்கப்பட்டு மன்னார் ஆயரினால் 2011 இல் திறந்துவைக்கப்பட்டது,
94. 2010ம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் மடுவின் சுற்றாடலின் சில பகுதியை சரணாலயம் என வர்த்தமானி மூலம் பிரகடணப்படுத்தி இருப்பதனால் மடுபரிபாலனம் மடுக்கோயிலின் எல்லையை மீள் பரிசீலனை செய்யவேண்டியள்ளது
95. போரின்பின் அரசாங்கத்தினால் ஆயரின் அனுசரனையுடன் 2009-2011 ஆம் காலப்பகுதியில், மடுத்தேவாலயம் புனரமைக்கப்பட்டதுடன், மடுக்கோவிலைச் சுற்றியுள்ள (பிரதான) வீதிகள் பிரதான செப்பனிடப்பட்டு, சீமேந்துக் கற்களினால் நடைபாதை போடப்பட்டு மின்னொளி ஊட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன,
96. 2010-2011 ஆம் காலப்பகுதியில், தெற்கிலுள்ள பெருந்திரளான யாத்திரியர்கள் குழுக்களாகவும், தனித்தும், நாளாந்தம் மடுத்தேவாலயத்தை தமது ஆன்மீக தேவைக்காக தரிசிக்கின்றனர், ஒருநாளில் சுமார் ஜந்து வாகனங்களும், 200 ற்கு மேற்பட்ட பக்தர்களும், மடுவை தரிசிப்பதாக நாள் ஏடுகள் குறிப்பிடுகின்றன,
97. 2011 ஆம் ஆண்டு இறுதியில் 21 வருடங்களின் பின், மடு புகையிரத நிலைய மீள்கட்டுமான பணிகள், அரசாங்கத்தினால் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,
98. 2011 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 1990 இல் இடம்பெயர்ந்து சென்ற சிங்கள, முஸ்லீம், தமிழ் மக்கள், மீண்டும் மடுவை அண்டியள்ள பிரதேசங்களில் வந்து குடியேறத் தொடங்கினர், இருப்பினும் மடுத்தேவாலயத்தின் தனித்துவமான இயற்கை வன, சுற்றாடல், கடந்த 600, வருடங்களாக மாறுபடாமல் அமைதியும், பக்தியும், சூழ்ந்த இடமாக இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது,
99. 2011 ஆவணி மாத திருவிழாவிற்கு முன், மன்னார் ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள், 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட அழகிய இரண்டு மாடிக் கட்டிடத்தை, குருக்கள் தங்குவதற்காக திறந்து வைத்தார், பல ஆண்டுகளின் பின் இக்கட்டிடம் ஒன்றே, மடுத்திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,
வருடந்தோறும் நடைபெறும் மடு அன்னையின் திருநாட்கள்.
1. தை 1ம் நாள் – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா திருவிழா
Mother of God
2. மாசி 2ம் நாள் – காணிக்கை மாதா திருவிழா
3. பங்குனி 10ம் நாள் – தென்பகுதி சிங்களவர்களினால்;; பாராம்பரியமாக
கொண்டாடப்படும் திருவிழா ( Feast that is being celebrated Traditionally by the Sinhalease brothern from South part of Srilanka
4. பெரிய வியாழன் தொடக்கம்
உயிர்த்த ஞாயிறு வரை – பரிசுத்த ஞானொடுக்கம்
5. வைகாசி 1ம் நாள் – ஞாயிறு மாதாவின் மாதம் Month of Mary
6. ஆடி 2ம் நாள் – மரியாயின் மாசற்ற இதயம் – திருவிழா
7. ஆவணி 15ம் நாள – தூய கன்னி மரியாயின் விண்ணேற்புத் திருவிழா
8. புரட்டாதி 8ம் நாள் – தூய கன்னி மரியாயின் பிறப்பு திருவிழா
Birth of Mother Mary
9. ஐப்பசி 1ம் சனி – மடுத் திருப்பதியின் திருவிழா Madhu Church Feast
10. மார்கழி 8ம் நாள் – தூய கன்னி மரியாயின் அமலோற்பவ திருவிழா
Holy Conception of Mary Mother
1670-2011 வரையான மருதமடு அன்னையின் தேவாலயத்தை பரிபாலித்த
ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர்
ஆண்டு ஆயர்கள் – குருக்கள் – பொதுநிலையினர்
1. 1670-1697 மடு ஒரேடேரியன் சபை வ.பிதா யோசவாஸ் ((Oratorians)
2. 1697-1720 வண.பிதா பெற்றோ பெரேரா (Pedro Perrao)
3. 1720-1727 வண. பிதா. அந்தோனியோ டீ டவாரோ (Antonio de Tavora)
4. 1727-1728 வண. பிதா. பெற்ரோ டீ. சல்டன்கா (Pedro de Saldanha )
5. 1728-1732 வண. பிதா. யோவா டீ. சா ( ( Joao de sa )
6. 1733-1743 வண. பிதா. பிரான்சிஸ்கோ கொண்சல்வாஸ் (Francisco Consalvez
வண. பிதா. பிராஸ் பெரேரா (Bras Pereira)
வண. பிதா. கஸ்ரோடியோ டீ. அந்திராதி (Custodio de Andrade)
வண. பிதா. தியாயோ டீ. றொசாரியோ (Diego de Rosario)
7. 1743-1847 மடுப்பரிபாலனம் ஒறோரேரியன் குருக்களினால் வழிநடாத்தப்பட்டது.
இக்காலப்பகுதியில் போர்த்துக்கேயர் ,16 நூற்றாண்டில் தென் ஆசியாவிலுள்ள சில நாடுகளை தமது ஆளுகைக்கு உட்படுத்தியதால் ஆயர்களின் பாதுகாப்பில் (PADROADO) பாட்ராடோவை உட்படுத்தின. பரிசுத்த பாப்பரசரின் ரோமை ஆளுகைக்கு உட்பட்ட திருச்சபை புரப்பக்கண்டா (Propaganda ) என அழைக்கப்பட்டது. இக்காலத்தில் மடுப் பகுதியில் நிச்சயமற்ற தன்மை நிலவியது.
8. 1848-1849 இக்காலப்பகுதியில், இலங்கைத் திருச்சபை கொச்சின் மறைமாவட்டத்தின் கீழ்
இயங்கி வந்தது. “பாப்பாண்டவர் கிரகோரி 16” கொச்சியிலிருந்து இலங்கையை பிரித்து 03-12-1834 இல் தனி “விக்கார் அப்போஸ்தலிக்க” மறை நாடாக்கினார். (Vicar Apostolic) 1வது (Oratorian) ஒரட்ரோரியன் குருவாக கோவையை சேர்ந்த வண.பிதா பிரான்சிஸ் சேவியர் FRANCIS XAVIEAR . OMI நியமிக்கப்பட்டார்.
9. 1848-1852 வண. பிதா ஜோசப் சியாமின ( Joseph CIAMIN ) ஆளுகை.
10. 1852-1855 மடுமாதா தேவாலய நிர்வாகத்தில் நிச்சயமற்றதன்மை காணப்பட்ட இக்காலத்தில்
வண. பிதா ளு. விவியன் (Vivien ) இடைக்கால பொறுப்பாளராயிருந்தார்.
11. 1856-1857 அதி. வந்த வடமாகாண ஆயர் கலாநிதி பெற்றாச்சின் ( Bettachini) ஆயரின்
மறைவிற்குப்பின், வண. பிதா J B E புளோரின் (Flurin) ஆளுகை.
12. 1857-1862 மடு பரிபாலனம் அமல உற்பவ சபையினரின் (OMI) நிர்வாகத்திற்கு உட்பட்ட
காலம் வண. பிதா குF M J கோரடஸ் (Gouret) வண. பிதா A J St.ஜீனிஸ் (St.Geneys) ) ஆளுகை.
13. 1862-1868 அதி. வந்த வடமாகாண ஆயர் S.செமாரியா (Stphean Semeria) அவரின்
இறப்பிற்குபின் வண. பிதா A. J. M. L . பூஷாக் ((Pussacq) – OMI ஆளுகை.
14. 1869-1873 வண. பிதா J. J. M பௌசின் (Pouzin ) OMI ஆளுகை.
15. 1873-1875 இருவருடங்களாக மடு பரிபாலனம் பற்றி இலங்கை உயர் நீதிமன்றத்தில்
வழக்குகள் நடைபெற்றன. ஆயருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
16. 1875-1883 அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி பொஞ்ஜீன் (Christopher Bonjean)
OMI அளுகை.
17. 1883-1893 அதி வந்த வடமாகாண ஆயர் கலாநிதி அன்று மெலிசன் (Andrew Melizan)OMI ஆளுகை.
18. 1893-1919 அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி கென்றி யுலியன்(Henry Joulin) OMI ஆளுகை.
19. 1919-1923 அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி பிறேல்ட் (J.A Brault) OMI ஆளுகை.
20. 1924-1950 அதி வந்த வடமாகாண ஆயர் கலாநிதி J.A கைமர்(Guyomar) OMI
ஆளுகை.
21. 1950-1972 அதி வந்த. யாழ் ஆயர் கலாநிதி எமிலியானுஸ்பிள்ளை மேற்றிராசன குரு
ஆளுகை.
22. 11972-1973 அதி வந்த. யாழ் உதவி ஆயர் கலாநிதி L.R அன்ரனி மேற்றிராசன குரு
ஆளுகை.
23. 1973- 1981 அதி வந்த. யாழ் ஆயர் கலாநிதி தியோகுப்பிள்ளை மேற்றிராசன குரு.
ஆளுகை.
24. 1981-1992 அதி வந்த. மன்னார் ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் மேற்றிராசன
குரு ஆளுகை.
25. 1992-10-20… அதி வந்த. மன்னார் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் மேற்றிராசன குரு
ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டு இற்றைவரை
(2011) பொறுப்பேற்றுக்கொண்டார்.
மடு அன்னையின் சமாதான யாத்திரைகள்
மடு அன்னையின் திருச்சுரூபம் கீழ்க்கண்ட ஆண்டுகளில் திருச்சுரூப பாதுகாப்பிற்காகவும் மக்களின் நன்மை கருதியும் மடுத்தேவாலயத்தை விட்டு; வெளியில் எடுத்துச்செல்லப்பட்டதாக சரித்திரம் கூறுகின்றது.
i. முன்னைய காலத்தில் மடுத்திருப்பதியை நிர்வகித்த கோவில் சக்கிடுத்தார் போன்றோரால் மடுக்கிராமத்தில் பஞ்சம், வரட்சி, நிலவியபோதும் சகல ஊர்மக்களும், இடம்பெயர்ந்தபோது மடுமாதாவின் திருச்ச்சுரூபம் 5 கி.மீ தூரத்திலுள்ள கள்ளியட்டைக்காடு எனும் விவசாய கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதாக பல சான்றுகள் உள்ளன.
ii. இதேபோன்று மடுமாதாவின் பக்தர்களுக்கிடையில் பிணக்குகள் ஏற்பட்டபோது ஒரு பிரிவினரால் மாதாவின் திருச்சுரூபம் முன்னைய ஆண்டுகளில் கள்ளியட்டைக்காட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பழைய தரவுகள் சான்று பகர்கின்றன.
iii. 1949ல் மடுமாதாவின் முடிசூட்டு விழாவின் முன்னோடியாக செபமாலை ஓதல் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
iஎ. 1974ல் மடுமாதாவின் 50 வருட முடிசூட்டு விழா ஞாபகமாக மனம்திரும்புதல் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
எ. 2000ல் 75 வருட முடிசூட்டு விழா ஞாபகமாக சமாதானம் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
எi. 2001ல் இலங்கையின் சமாதானத்தை வேண்டி மன்னார் மாவட்ட ஆலயங்கள் கொழும்ப, அனுராதபுரம், சிலாபம், கண்டி, போன்ற மறைமாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
எii. 2009 சித்திரையில் மடு அன்னையின் பழமை வாய்ந்த புனித சுரூபத்தை கடும் போரில் இருந்து காப்பாற்ற வண பிதா எமிலியானுஸ்பிள்ளை அவர்களால் 21 கி.மீ தூரத்திலுள்ள தேவன்பிட்டி தேவாலயத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது.
எiii. 2009 ஆவணி 5ம் திகதி போர் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்தபோது, மீண்டும் மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.
iஒ. 2009 ஆவணி 10ம் திகதி இராணுவம் மடுத்தேவாலயத்தை ஆயரிடம் கையளித்தபின் திருச்சுருபம் மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஒ. 2009 ஆவணி 15ம் திகதி மடுத்தேவாலயம் மந்திரிக்கப்பட்டு மீண்டும் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டது.
ஒi. அன்று முதல் இன்றுவரை இயல்பு நிலையில் அன்னையின் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மடுத்திருப்பதி பக்தர்களின் புனித பிரதேசமாக பாரம்பரியமாக கீழ்கண்ட
எல்லைகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.
கிழக்கு : மடு தேவாலயத்திலிருந்து பரப்புக்கடந்தான் வீதியில் அமைந்துள்ள 02கி.மீ தொலைவிலுள் சின்னவில் வெளிவரை.
மேற்கு : மடு தேவாலயத்திலிருந்து மடுறோட், சந்திக்குச் செல்லும் பாதையில் 02கி.மீ தூரத்திலுள்ள சின்னப்பண்டிவிரிச்சான் சந்திக்கு அருகில் அமைந்துள்ள மடு நுளைவாயில் வரை.
தெற்கு : மடு தேவாலயத்திலிருந்து பெரியபண்டிவிரிச்சான் வீதியில் அமைந்துள்ள 02கி.மீ சந்தியிலுள்ள 100 வீட்டுத்திட்டம்வரை.
வடக்கு : மடு தேவாலயத்திலிருந்து தட்சணாமருதமடு கிராமம் செல்லும் 03கி.மீ தூரத்திலுள்ள நெல்வயல் காணிவரை.
உசாத்துணை:
11. மடு அன்னையின் “குறோனிக்கல் திருத்தலம்”; எழுதியவர் வண.பிதா A.J.P. . அந்தோனியஸ் OMI வெளியீடு யாழ் மறைமாவட்டம் 1956ம் ஆண்டு
12. “ஒறோட்டோரியம் இலங்கை சபை 1687-1742 வரை” வெளியீடு 1938ம் ஆண்டு.
13. “இலங்கை கசட்டியா”, எழுதியவர் சைமன் கா~p செட்டி 1834ம் ஆண்டு
14. “மன்னார் கசட்டியா”, எழுதியவர் E.B டென்காம் C.C.S 1901ம் ஆண்டு
15. “மன்னாரின் வேதசாட்சிகள்” எழுதியவர் A.J.P அந்தோனியஸ் OMI யாழ்ப்பாணம் 1944ம் ஆண்டு.
16. “இலங்கை அமலமரித் தியாகிகள் சபை 1848-1948 வரை” எழுதியவர் D.J.P குறுப்பு 1948ம் ஆண்டு
17. “யாழ்ப்பாணத்து கத்தோலிக்க சமயம்” எழுதியவர் வண.பிதா ஞானப்பிரகாசியார் OMI 1893-1918 வரை, 1926ம் ஆண்டு வெளியீடு
18. “மடுத்தேவாலய கோடெக்ஸ் சரித்திரம் 1886-1950 வரை”
19. அதி. வந்தனைக்குரிய கலாநிதி J.A கைமர் OMI யாழ் ஆயர் 1924-1950 வரை வெள்ளிவிழா மலர் வெளியீடு
20. “போர்த்துக்கேயர் காலத்தில் மடு பழமை வாய்ந்த தேவாலயம்” வெளியீடு 24-06-1875
21. “புதிய மடுத்தேவாலயம்” மன்னார் மாவட்ட நீதிமன்று வழக்காடு இல. 338 யாழ்ப்பாண விக்காரியத்திற்கு சார்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதி. வந்த. ஆயர் கலாநிதி கிறிஸ்த்தோப்பர் பொஞ்ஜீன் OMI யினால் எழுதப்பட்டது.

அன்னதான கந்தன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வரலாறு !

ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .

இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கவுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும், பொலிவிற்கும், தெய்வத்தின் திருவருட் தன்மைக்கும் அளவே கூறமுடியாதுள்ளது.

இங்கே குடிகொண்டுள்ள கந்தசுவாமியார் என்ற முருகன் திருவருளானது மிகுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. கந்தப் பெருமானது கருணை வெள்ளம் மடைதிறந்து பாய்கிறது. அவரை நாடி வரும் அடியார்கள் பக்தி வெள்ளத்திலும், கருணைக் கடலிலும் மூழ்கி திருவருளையும், திருவருள் பிரசாதத்தையும் தினந்தோறும் பெற்ற வண்ணம் இருக்கிறார்கள்.
ஆலயத்தின் ஆரம்பகால தோற்றம்.

இவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமையப் பெற்றுள்ளது. ஆகம விதிகட்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கே கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகிறது.

இங்கே முருகன் ”பூரணம்” என்று கூறும்படியாக பத்திரசக்தி முகூர்த்தத்தில் அமர்ந்திருக்கிறார் இதைக்கண்ணுற்ற வேதநாயகம்பிள்ளை என்ற பக்தி சிரோன்மணி ‘செல்வச் சந்நிதி மேவிய பூரணனே’ என்றும், ‘செல்வச் சந்நிதி போற்றிய பூரணனே’ என்றும், ‘பூரணமாஞ் செல்வச் சந்நிதி மேனிப்புவனமுய்யும்’ என்றும் வாய்விட்டு மனம் திறந்து கசிந்துருகிப் பாடியுள்ளார்.

சின்மயம் என்று கூறுவதும் கருணையே குறிக்கும். இவ்வாலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியலுக்குமேல் பொருளாதார, சமூகவரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் இதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இதைப்பற்றிய வரலாறுகள், சான்றுகள் இன்று கிடைக்காதபோதும் கர்ணபரம்பரை வரலாற்றுக்கதைகள் உண்டு.

இங்கு ஓடும் ஆறும் இதன் அருகமைந்த ஆலயமும் வரலாற்றுடன் பக்தி இளையோடபட்ட தொன்மையான பெருமை வாய்ந்தது. தொண்டைமானாறு என்னும் இவ் ஆறானது முன்பு கடலுடன்சங்கமிக்காது ‘வல்லிநதி’ என்னும் பெயருடன் மிளிர்ந்தது.

இதற்குச்சான்றாக வல்லிநதிக்கு மேலாகப் போடப்பட்ட பாலமானது வல்லைப் பாலம் என்று அழைக்கப்பட்டது அது இன்றும் இப் பெயரையே கொண்டுள்ளது. இதையொட்டியே வல்லை வெளி என்றும் இப் பாலத்தின் அருகில் உள்ள காணிகளை வல்லியப் பெருவெளி என்று இன்றும் கூறப்படுகிறது.

இந்நதியின் தொடு வாயிலை தொண்டைமான் என்ற ஓர் அரசன் வெட்டி கடலிடம் சங்கமிக்க விட்டான். அன்று முதல் இந் நதியின் பெயர் (ஆறு) தொண்டைமானாறு என்றும் அழைக்கப்பட்டது. இப் பெயரே இக் கிராமத்திற்கும் மருவி வந்துள்ளது.

அரசன் நதி வாயிலை வெட்டியதன் காரணமாக கடலின் உப்பு நீரானது உட்புகத் தொடங்கியது நன்நீராய் இருந்த வல்லிநதி நீர் மாற்றம் பெற்றது போல நன்நீரான வல்லிநதி உவர் நீராக மாறியது. இவ் உவர் நீர் உள் நாடு சென்றதன் காரணமாக கரணவாய் போன்ற பகுதிகளில் உப்பு பெரு வாரியாக இயற்கையாக விளையத் தொடங்கியது.

இவ் உப்பானது பிற் காலங்களில் இவ் ஆற்றினுடாக கொண்டு வரப்பட்டு தொடுவாயிலில் அமைந்திருந்த சேகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டது. ஆதன் காரணமாக அந்நிலையத்தை உள்ளடக்கிய நிலம் ‘உப்பு மால்’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது இலங்கையின் கரையோரத்தை ஆட்சி புரிந்த அந்நிய ஆட்சியரான போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் அதன் பின் ஆண்ட ஆங்கிலேயரும் இவற்றுடன் வணிக முறையில் தொடர்பு கொண்டிருந்தனர்.

ஓல்லாந்தர் காலத்துடனேயே இலங்கையின் காணிகளுக்கான பதிவேடுகள் எனக் கூறப்படும் ‘தோம்பு’எனும் காணி உறுதிகள் பிறந்தன இக்காலத்தில் பதியப்பட்ட தோம்புகள் செல்வச்சந்நிதி ஆலயத்தின் தோற்றத்திற்குரிய முதல் எழுத்து வடிவமான சாதனமாகும்.

அதன் பின்னர் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர் இலங்கையின் கண் காணப்படும் ஆலயங்கள் எல்லாவற்றையும் நல்ல முறையாகப் பதிந்து ‘ஆலயப் பதிவேடு’ என்னும் பதிவேட்டின் மூலம் பதிந்தனர். இதில் பெருமைமிக்க செல்வச் சந்நிதி ஆலயத்தின் தோற்றம் தொடக்கம் அமைப்பு நடைமுறை என்பவற்றை குறித்து வைத்தனர்.

இவர்களின் பதிவேட்டின் துணையைக் கொண்டு செல்வச் சந்நிதி ஆலயத்தின் உற்பத்தி வரலாறு (ஆரம்ப வரலாறு) குருகுல பரதவம்ச மருதர் கதிர்காமருடன் தொடங்கி மிளிர்ந்ததை ஆணித்தரமாக அறியக்கூடியதாக உள்ளது. இவ் ஆற்றங்கரையிலும் ஆற்றங்கரையை அடுத்தும் பரத வம்சம் என்று கூறப்படும் குருகுலத்தவரே குடியிருந்தனர்.

இன்றும் இவர்களே வாழ்ந்து வருகின்றனர் இவர்களைத் தவிர வணிக நோக்கத்திற்காக வந்தேறு குடிகளாய் இருந்தவர்கள் காலப் போக்கில் கந்தப் பெருமானது சீற்றத்திற்கு ஆளாக்கப்பட்டு அடியோடு அழிந்து ஒழிந்து போயினர் இப் பரத குலத்தவரின் தெய்வமாகிய முருகக் கடவுளே ‘வேல்’ ரூபத்தில் இச் செல்வச் சந்நிதி ஆலயத்தில் கோயில் கொண்டுள்ளார்.

இப்பரத குருகுல வம்சத்தின் குல தெய்வமாகிய முருகனை கந்தசுவாமியார் என்றும் கூறி வந்துள்ளனர். இப்பெயரினைக் கொண்டிருந்த காரணத்தாலும் இங்கே ஒளி விட்டு பிரகாசிக்கும் கருணை பக்தி அருள் ஆகியவற்றாலும் முருகன் அடியார்கள் குடிகொண்டிருக்கும் பெருமானை ‘ஆற்றங்கரையானை’ ‘ஆற்றங்கரை வேலன்’ கல்லோடையான்(இதன் அருகில் கல்லோடைஉள்ளது.) ‘கல்லோடைக் கந்தன்’ ‘அன்னக்கந்தன்'(அன்னம் தினந்தோறும் கிடைப்பதால்) ‘அன்னதானக் கந்தன்’ என்றும் அழைத்து பாடிப் பணிந்து பரவி நின்றனர்.

இன்றும் இத்திருப்பெயர்களைக் கூறி அடியார்கள் வணங்குவதை இவ்வாலயத்தில் கண்ணால் காணக் கூடியாதகவும் காதால் கேட்கக்கூடியதாகவும் உள்ளது. கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் ஆலயத்திற்கு பக்தி மணம் கமழும் தெய்வீக வரலாறு உண்டு.

திருச்செந்தூர் என்னும் பதியில் இருந்து கந்தப் பெருமான் வீரவாகு தேவரை மகேந்திரா புரிக்கு சூரனிடத்து தூதனுப்பினார் தூதுவனான வீரவாகு தேவர் முதல் முதலாக வட இலங்கையின் வல்லி நதிக் கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார் இவரது திருப்பாதம் பூமியின் கண் பதிந்த போது கல்லோடையாக காணப்படும் இடத்தில் பாதச் சுவடுகள் தோன்றின.

இவ்வாறு வீரவாகு தேவரது பாதச் சுவடுகளை இன்றும் ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் பாதச் சுவடுகளாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. வீரவாகுத் தேவர் பெருமானது கட்டளைப்படி மகேந்திரா புரிக்கு சூரனிடத்துச் சென்று திரும்பி திருச்செந்தூர் செல்வதற்கு மீண்டும் இந் நதிக் கரைக்கு வந்தார்.

வந்தபொழுது சந்திக் காலமாகி விட்டது எனவே அவருக்கு கந்தப் பெருமானுக்குரிய சந்திக்கால பூசை செய்ய வேண்டிய பணி மனத்தில் எழுந்த காரணத்தால் இவ் வல்லி .நதிக்கரையில் எம்பெருமானுக்குரிய சந்திப் பூசையை செய்து வழிபட்டார். இவ்வாறு வீரவாகு தேவரால் சந்திக்கடன் செய்யப்பட்ட இடம் சந்நிதியாக மருவி செல்வச்சந்நிதி என்று திருப் பெயரைப் பெற்றது.

அன்று முதல் சகல செல்வம் அனைத்தையும் தனது திருவருளினால் வழங்கும் கந்தப் பெருமான் வீற்றீருக்கும் பதியாக தோற்றியது. இச் செல்வச்சந்நிதி ஆலயத்தில் கோயில் கொண்ட கந்தப் பெருமானை தேவலோக காந்தருவர் ஒருவர் மனக் கோயில் சமைத்து இடை விடாத மௌன தியானத்தின் மூலம் முத்தியடைந்து இறைவனது பாதார விந்தத்ததை போய்ச் சோர்ந்தார்.

அதன் வரலாற்றை நோக்கினால் ‘ஐராவசு’ என்ற தேவலோக காந்தருவர் வியாழபகவானது கட்டளைப்படி ஒழுகாது தவறியமைக்காக பகவான் ‘நீ பூமியின் கண் பிறக்கக்கடவாய்’ என்று சாபமிட்டார் இச் சாபத்திற்கு ஆளாகிய ஐராவசு மேலுலகமாகிய தேவலோகத்தில் இருந்து கீழ் உலகமாகிய பூமியின் கண் பிறந்து அல்லலுற வேண்டியதன் நிலையை உணர்ந்து தனக்கு சாப விமோசனம் தரும் படியும் தன்னை இரட்சிக்கும் படியும் பகவானை வேண்டி வணங்கினார்..

அதற்குப் பகவான் தனது சாபத்தை மாற்ற முடியாதென்றும் நீ பூமியின் கண் கதிர்காமத்திற்குபு; பக்கத்தில் உள்ள காட்டில் யானையாக அவதரித்து வரும்போது கதிர்காமக் கந்தனை வணங்க வரும் சிகண்டி முனிவரால் சாப விமோசனம் பெற்று சந்நிதி சென்று தியான வழிபாடு செய்து சமாதி அடைவதன் மூலம் இறைவனது பாதர விந்தத்தை பற்றுவாய் என்று கூற்னார்;..

இதன் பிரகாரம் கதிர்காமத்திற்கு அயலில் உள்ள காட்டில் ஐராவசு யானையாக அவதரித்து வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் இவ் யானைக்கு யானைத்தீ என்ற நோய் பீடிக்கலாயிற்று இதன் காரணமாக யானையானது காடுகள் மரங்கள் உயிரினங்கள் பலவற்றையும் அழித்துக் கொண்டிருந்தது.

இது இவ்வாறு இருக்க தேவலோகத்தில் உள்ள இசைப் பிரியனாகிய சிகண்டி எனும் முனிவர் முத்தமிழ் முதல்வாரன சுப்பிரமணியப் பெருமானை அணுகி அடியேன் இசை நுணுக்கங்களை மேன்மேலும் அறிய விருப்புடையேன் ஆகி இருத்தலால் அவற்றை அறியத் தருமாறு வேண்டினார்.

அதற்கு எம் பெருமான் யாம் முத்தமிழ் வித்தகரான அகத்திய முனிவருக்கு உபதேசித்துள்ளோம்;. ஆவர் தென் பொதிகை மலையில் இருப்பதால் அவரிடம் சென்று கேட்டு அறியும் படி திருவாய் மலர்ந்தருளினார் இதன் பிரகாரம் சிகண்டி முனிவரானவர் பொதிகை மலை சென்று அகத்தியரிடம் இசை நுனுக்கங்களை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் கந்தப் பெருமானை கதிர்காமத்தில் கண்டுகளித்து தரிசனம் பெற கதிர்காமம் நோக்கி புறப்பட்டார். அவர் கதிர்காமம் நோக்கி காடுகளினுடாக வந்துகொண்டிருக்கையில் யானைத்தீ என்ற நோயால் பீடிக்கப்பட்ட யானையானது காடுகள் மரங்கள் முதலியவற்றை அழிவு செய்துகொண்டிருப்பதைக் கண்டார்.

அவ் யானையானது இவரையும் இவரது சீடர்களையும் கொல்வதற்கு பிளிற்றிக் கொண்டு இவர் முன் எதிராக காடுகளையும் தருக்களையும் அழித்து வந்துகொண்டிருந்தது இதனைக் கண்ணுற்ற இவரது சீடர்கள் முனிவரை அனுகி தேவரீர் எங்களை காத்தருள்க என்று வேண்டி நின்றனர்.

அவ் வேளையில் முனிவர் தனது ஞான சிருஸ்டியினால் இவ் யானையினது பூர்வீக பிறப்பை நோக்கியபோது அதில் வியாழ பகவானது சாபத் தன்மையும் விமோசனத்தையும் அறிந்து கொண்டார்.

அந்த மாத்திரத்தே கதிர்காமக்கந்தப் பெருமானை மனத்தில் தியானித்துக் கொண்டு’சடாச்சர’ மந்திரத்தை உச்சரித்து அருகில் இருந்த வெற்றிலையை தன் கையினால் நுள்ளி எடுத்து இவ் வெற்றிலையானது வேலாகச் சென்று அழிக்குக என்று கூறி விடுத்தார்.

அவ் வெற்றிலையானது சுப்பிரமணிய கடவுளின் திருவருளினால் கதிர்வேலாக மாறிச் சென்று யானையினது உடலைக் கிழத்தது கிழித்த மாத்திரத்தே யானையானது அவ்விடத்தில் வீழ்ந்தது அவ்வாறு வீழ்ந்த இடத்தில் ஒரு தேவ உருத்தோன்றி’ ஐயனே நான் முன்பு தேவலோகத்தல் ஐராவசு எனும் காந்த ரூபானாய் இருந்தேன் வியாழ பகவானது சாபத்தின் காரணமாக இவ்வாறு யானை உருவில் இப் பூமியின் கண் பிறந்து நீண்ட காலமாக வருத்தமுற்று வந்துள்ளேன் தேவரீர் விட்ட வெற்றிலையானது கதிர்வேலயுத கடவுளின் திருவருள் வேலாக மாறி எனது உடலை ஊடூரிவிச் சென்றதால் எனது சாபம் நீங்கிற்று’ என்று கூறி பணிந்து நின்றார்.

இதைக்கண்ணுற்ற முனிவரும் அவரதுசீடர்களும் மற்றையோரும் ஆச்சரியம் அடைந்து பக்திர சக்திமூர்த்தியே என பரவிப் பணிந்து வணங்கினார்கள்.

இதன்பின்னர் ஐராவசுவை தம்மைப்போன்ற முனிவர்களான தமது சீடர்களுடன் கதிர்காமக் கந்தப் பெருமானை நோக்கிச் செல்லலானார்கள்.

அவ்வாறு சென்று வேலை முடிந்தது என்று கூறி சிகண்டி முனிவர் பெருமானிடத்தும் ஐராவசு முனிவரிடத்தும் விடைபெற்று சீடர்களுடன் கோயிலை நோக்கி செல்லலானார் அவ்வேளையில் ஜராவசு முனிவர் தன்னையும் ரட்சிக்கும்படி கேட்டபோது அந்தப் பெருமான் நமது வீரவாகுதேவர் இவ் ஈழத்தின் வட கரையினை வல்லி நதிக்கரையோர்த்தில் எனக்குத் சந்திக்கடன் செய்து வழிபாடு செய்தார்.

அவ்விடத்தில் புனிதத்தை மேலோங்குவதற்காக செய்த வழிபாடு மௌன வழிபாட்டின் மூலம் பூசைகள் செய்து தியானத்தின் மூலமாக எனது பாதாரவிந்தத்தை வந்தடைவாய் என்று கூறி திருவாய்மலர்ந்தருளினார் இதன் பிரகாரம் ஜராவசு முனிவர் வடக்கே உள்ள வல்லி நதிக்கரைக்கு வந்து எம்பெருமான் கூறியவாறு வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்து இடத்தில் இருந்துகொண்டு மனக் கோயில் செய்து வரலானார். முந்தை வினை அறுக்க பெருமானார் முத்தியை கொடுத்தருளினார்.

ஜராவசுமுனிவர் தியான வழிபாடு செய்து தவம் இயற்றிய இடத்தில் முத்தியடைந்தார் இந்த இடம்தான் வல்லிநதிக்கரையில் உள்ள பூவரசம்மரத்தின் அடியாகும். அவ் முனிவர் சமாதி அடைந்த இடத்தில் காணப்பட்ட பூவரசம்மரமானது பெரியவிருட்சமாகி தொழும் அடியார்களது துன்பத்தை அகற்றும் தெய்வத்தன்மை பெற்றது அம் மரத்தின் அடியிலே தோன்றிய பூவரசுமரமானது இன்னும் இக்கோவில் நடுவில் காணப்படுகிறது.

இதைப்பற்றி கூறிய பக்தி சிரோன்மணி வேதநாயகப்பிள்ளை சொல்லலானார் செல்வச்சந்நிதி பூவரசைத் தொமும் அடியார்கள் பல்லாயிரத்துன்பம் எல்லாம் அகல பரிவுடனே……என்று பாடினர் இம்முனிவர் முத்தியடைந்து சமாதி அடைந்த பூவரசமரத்து அடிக்கு அருகிலேயே வீராகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்திலே இன்று பக்திரச்சக்தி முகூர்த்தத்தில் கந்தப்பெருமான் வேல் ரூபத்தில் கோயில்கொண்டுள்ளார்.

சிகண்டி முனிவர் விடுத்த வெற்றிலையானது வேலாகச்சென்று ஜராவசுவுக்கு சாபவிமோசனம் கொடுத்த காரணத்தினால் இவ் ஆலயத்தில் வெற்றிலை வைத்து பக்திரசக்தி வழிபாடு செய்வதுடன் எமுந்தருளிவரும் எம்பெருமானாகிய வேலின் நடுவில் முக்கோணவடிவில் பொட்டுடன் வெற்றிலை வைத்து வீதி வலம் வருவதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

உலகில் வேறு எவ்விடத்திலும் இல்லாத தனித்துவமான வழிபாட்டை கொண்டுள்ளது. இங்கு நடைபெறும் முகூர்த்தத்தை பக்திரசக்தி முகூர்த்தம் என்றும் வழிபாடு மானசிக மௌன அன்பு வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இத்திருத்தலம் ஞானலய திருத்தலமாக மிளிர்கிறது .

இன்று செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்த வரலாற்றினை நோக்கின் இன்றைய தோற்றத்திற்கும் ஆரம்பத்திற்கும் காரணகர்த்தாவாக மருதர் கதிர்காமர் என்ற கந்தப்பெருமானது கருணைக்கழல் பற்றிய பூசாரியாருடன் ஆரம்பமாகிய உண்மை தெளிவாகத் தெரிகின்றது.

குருகுலமாகிய வருணகுலத்தில் பரதசாதியில் இடை விடாத தியானவழிபாட்டு மூலம் எம்பெருமானது. பாதாரவிந்தத்தைப் பற்றிய மருதர் கதிர்காமரே இவ்ஆலயத்தில் தோன்றி வழிபாடு செய்த பின் இன்று உள்ள அவர்வழித் தோன்றிய சந்ததியினருக்கு வழிபாடுசெய்ய விட்டுச்சென்றுள்ள தெய்வீகப்பொக்க்கிசமாகும்.

19ம் நூற்றான்டின் முற்பகுதியில் இவ் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த பரதகுலத்தவர்களில் ழூத்தவரும் பக்திமானுமாகிய மருதர் கதிர்காமர் என்பவர் நாள்தோறும் இவ் ஆற்றில் மீன் பிடித்து சீவியம் நடத்தி வந்தார் இவர் மீன் பிடிக்கச்செல்லும்முன்னர் இங்கு சமாதியடைந்த பூவரசமரத்தினை வணங்கியே செல்வது வழக்கம்.

இவர் நாள்தோறும் இவ்வாறு செல்வதன் ழூலம் பக்தி மேம்பாட்டினை பெற்றுக்கொண்டு வரலாயினார் இவ்வாறு இவரது பக்தி வரலாற்றினை கண்ணுற்ற எம்பெருமானார் ஆற்றங்கரையில் தன்னை நாள்தோறும் நினைந்துருகி வணங்கி மீன்பிடிக்கும் கதிர்காமர் முன்னர் மனித உருவில்தோன்றி கதிர்காமா என்னிடம் இக்கரைக்குவா என அழைத்தார்.

இதன் பொருள் நீ செய்யும் தொழிலை விடுத்து என்பால் என் பாதார விந்தத்தைப் பணிய என்னிடத்தில் வா என்பதாகும் இதனைக்கேட்ட கதிர்காமர் ஆற்றின்மேலிருந்து கரைக்கு வந்தார் இவ்வாறு வந்துசேர்ந்தவரை இறைவன் கூட்டிச்சென்று பூவரசமரத்தினடியினையும் அதன்அருகில் வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்தினையும் காட்டிக்காட்டி நீயே எல்லா வகையிலும் ஏற்றவன் என்று கூறி மறைந்தருளினார்.

முனிவர் சமாதியடைந்த இடத்தில் குரு பூசை செய்யவும் வேண்டும் என பெருமானார் கேட்டதன்படி கதிர்காமரும் அவர்பின்வரும் சந்ததியினரும் பிதிர்க்கடமை போன்று செய்து வரலானார்கள். இது செய்யாவிட்டால் மிகுந்த தொல்லைகள் ஏற்படும் எனக்கூறினார் இதனால் அன்றுமுதல் இன்றுவரை இதனைக் கடைப்பிடித்து பூசைகள் செய்து வருகின்றனர்.

கதிர்காமர் முதலில் ஆலயம் அமைத்து பூசை செய்தபின் மற்றைய பங்காளரது காணிகள் யாவற்றையும் கொள்விலையாகவேண்டினார் இதற்கு தோம்பு உறுதி என்பன சான்றாக உள்ளன கதிர்காமரும் அவர் மகனான வேலுப்பின்ளை ஜயரும் மற்றும் பிள்ளைகள் எல்லோருமாக இக்கோயிலை முதன்முதலில் காலத்தில் எம்பெருமான் கதிர்காமருடன் உறவாடிய காலம் 1824ம் ஆண்டு.

கோயில் பதிவேடு கதிர்காமரும் வேலுப்பிள்ளை ஜயரும் மற்றும் கதிர்காமரது பிள்ளைகளும் பனையோலையால் வேயப்பட்ட சிறு கொட்டில் அமைத்து அதில் வழிபாட்டுப் பூசை செய்தார்கள். இதன் பின் இவ் ஆலயத்தை எம்பெருமான் கூறியபிரகாரம் கட்டி நிற்குண பிரமமாக வைத்து வழிபடத்தொடங்கினார்.

பெருமான் கூறும் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்வதே பெரும்பணி என்றுகூறி கதிர்காமர் பூசை செய்து வந்தார் அதன்பின்னர் தனது வழித்தோன்றல்களான பிள்ளைகளுக்கு இங்கு கைக்கொள்ள ணேடிய நடைமுறைகளையும் பூசைமுறைகளையும் உற்சவ முறைகளையும் உபதேச முறையில் கூறினார்.

இவர்களும் தமது பிள்ளைகளுக்கு கூறி சந்ததி சந்ததியாக உபதேச முறை கூறப்பட்டு வந்தது இதன் பிரகாரமே கர்ண பரம்பரையாக கூறப்பட்ட தொண்டுகளை மற்றைய பரம்பரையினரும் கைக்கொண்டு வருகின்றனர் இவர்கள் இக்கோயிலின் சுற்றாடலிலும் சுற்றி உள்ள ஊர்களிலும் ஆசாரமாக புனிதமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது பூசை முறையானது பக்தி மார்க்கத்தின் உச்ச ஸ்த்தானமாகும் செல்வச் சந்நிதி ஆலயத்தில் அமைர்ந்திருக்கும் ஆற்றங்கரை வேலவனது அருளாட்சிச் சிறப்பை நோக்கினால் செல்வங்கள் பலவற்றை தம்மை நாடி வரும் அடியார்க்கு நல்கி அவர்களது பிறவிப்பிணியை அறுக்கும் திருப்பிரசாதத்தை நாள்தோறும் கொடுத்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.

நாள்தோறும் குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் வரும் அடியார்க்கு கந்தப்பெருமானது கருணைக்கடாட்சமும் கிடைக்கத் தவறுவதில்லை. செல்வச்சந்நிதிக்குப் போய் செல்வம் எல்லாம் பெறுவீர் என ஓர் சித்தர் கூறினார்.

அரும் செல்வம் பொருட் செல்வம் கல்விச் செல்வம் பிள்ளைச் செல்வம் இவ்வாறு எண்ணிறைந்த செல்வங்களை வேண்டுவார் வேண்டுவதை ஈய்ந்தவண்ணம் இருக்கிறார் இவர் ஒரு அருட்கொடை வள்ளல் இவர் பசிப்பிணி அறுப்பதில் அன்னக்கந்தனாகவும், அன்னதானக்கந்தனாகவும் காட்சி தருகிறார்.

இக்கோயிலைச்சுற்றி ஏறக்குறைய 45 மடங்கள் உள்ளன இவற்றில் அன்பர்கள் தம் நேர்த்தி மூலம் அன்னத்தை தானமாக கொடுக்கின்றனர் தீராத நோய்களை தீர்ப்பதில் கல்லோடைக் கந்தன் பெரும் வைத்தியராக காட்சியளிக்கின்றார். நோயுற்றவர்கள் இங்கு வந்து இவ்வாற்றில் மூழ்கி பிறவிப்பிணியை அவன் கழல் பற்றி கசிந்துருகிக் கேட்க அவர்களது தீராத்துன்பங்களை தீர்த்து வைக்கின்றார்.

வைத்தியர்களால் கைவிட்டு மருந்தால் மாற்றமுடியாத நோயை தன்திருவருளினால் மாற்றியதை கண்ணுற்ற பக்தி சிரோன்மணி வேதநாயகம் பிள்ளை ஆயள் வைத்தியர் எல்லாம் கைவிட்டு மாறாத வருநோய்கள் நினதருளா மரு மருந்தாற் போக்கி ஆனந்தமுறுகின்றன என்பார்..என பாடியுள்ளார்.

தந்தையுமிலை தாயுமிலை சுற்றமுமிலை என்று வரும் அடியார்க்கு தங்கஇடமும் உண்ண உணவும் கொடுக்கிறார் காசியில் இறக்க முத்தி என்பது போல் சந்நிதியில் ஆயுளை நீக்க வரும் அன்பர்கள் அனேகம் இவர்கள் சந்நிதியில் ஆன்மா ஈடேற்றம் பெறுகிறார். என்று கூறுவதும் மிகையாகாது மனச்சாந்தி தேடி அடியார்கள் மனச்சாந்தியையும் அவரது திருவருளையும் பெறுகிறார்கள் .

சந்நிதி முருகனது கருணையாவது காந்தத்தை விட கவரும்சக்தி உடையது .
அவரது திருவருள் செல்லாத இடமே கிடையாது .ஜேர்மனில் உள்ள கௌரிபாலாவை பல்லாயிர மைல்களில்; இருந்து அழைத்து அவர் இங்குவந்து தியானமூலம் வழிபாடு செய்கின்றார்.

இவ்வாறு சந்நிதிக்கந்தனது சச்தியால் கவரப்பட்ட கௌரிபாலா என்ற அடியார் ஆச்சிரமத்திற்கு அருகாமையில் இருப்பதை காணலாம். இத்தகைய சந்நிதி வேலவன் ஒரு கருணைக்கடல் அவரது கருணைக் கடாட்சம் எளிதில் எல்லோர்க்கும் கிடைக்கக்கூடியது.

அவரது அருட் திறனை ஆயிரம் நாவை உடைய ஆதிசேடனாலும் வருணித்து கூறமுடியாது பரந்து கிடக்கும் பார் வெளியில் பரம் சோதியாக பூரணத்துவமாக பொலிந்து விளங்குகிறார் செல்வச்சந்நிதிக் கந்தப்பெருமான். பிதிர் ஞானமார்க்கம் சகலமும் தருவார் சந்நிதி முருகன் அவன் தாள் வணங்கி அவன் அருள் பெறுவோம்.

Source : thondamanaru.blogspot.com

மன்னார் திருக்கேதீச்சரம்ஆலயம் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள்.

வரலாற்றுச் சுருக்கம்[தொகு]
கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்[மேற்கோள் தேவை]. இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.

இத் தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.



இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.

இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்[மேற்கோள் தேவை].

திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன

ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.

பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.

போத்துக்கீசரால் தகர்க்கப்பட்ட இவ்வாயக் கற்களையுஞ் சிற்பங்களையும் கொண்டு மாதோட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது தேவாலயத்திற்கு அடிக்கலாகப் பயன்படுத்தப்பட்ட உண்மையைத் துலக்கா நிற்கின்றது.

அழித்துச் சிதைக்கப்பட்டிருந்த இத் திருடத்தை விடிவெள்ளியின் அவதாரம் செய்த திருப்பெருநதிரு அருள்மிகு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் அந்நிலத்தை வாங்கி சைவசயிகளின் பெருமையையும் புகழும் நிலைக்கவேண்டுமென்னும் பேரவாவினால் தூண்டுதல் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்த பெருமை ஐயா அவர்களையே சாரும். ஐயா அவர்களின் ஆசையை நிறைவுசெய்ய முயன்ற பெரியார்கள் கொழும்பு தம்பையா முதலியார், சுபைதார் வைத்திலிங்கம், புகையிரத தபால் ஒப்பந்தக்காரர் மாத்தளை ஆசைப்பிள்ளை ஆகியோரின் அருமுயற்சி அரசினரின் அடாத்தன்மையால் நிறைவுபெறவியலாது போயிற்று. தொடர்ந்து 1890இல் தகைசான்ற சைவப்பெரியார்களின் பெருமுயற்சியால் அக்காலத்து அரச அதிபர் அந்நிலத்தை சைவர்கட்கே வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டார்.

காலப்போக்கில் இத்திருகோயிலிற்கென ஓர் சபை உருவாக்கப்பட்டு அதன் முதலாவது தலைவராக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களும் பொதுச் செயலாளராக நீராவியடி பண்டிதர் அ.சிற்றம்பலம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு உயர்ந்த பல குறிக்கோளுடன் சபை செயற்பட யாப்பு அமைக்கப்பட்டது

சைவக் கொள்ககட்கு அமைய மறுசீரமைக்கப்படுதல். ஆலயத்தையுஞ் சொத்துக்களையும் யாதொரு குறையுமின்றிப் பாதுகாத்தல்.
மேற்கூறிய கொள்கை கோட்பாடு வரையறைகட்கு மாறில்லாத வகையில் செயற்படுதல். ஏனைய இறை வணக்கத் தலங்களை உருவாக்குதலும் துணைபுரிதலும்
மக்கள் தங்குமடங்கள், கல்விக் கூடங்கள், சமூக நிலையங்கள் போன்ற அன்றாட வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தல
போன்ற பல அரிய செயல்க்ளைப் புரியச் சபையத் தயார்படுத்தல் போன்ற உயரிய செயல்களை விரைந்து நடைமுறைப்ப்படுத்த முயற்சிப்பதென உறுதி பூணப்பட்டது. 10 பெப்ரவரி 1951இல் பொது உடமைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சபையாகத் திகழ்ந்தது. சபையாகப் பதிவுசெய்யப்பட்டதன் பின்பும் கோயில் உருமைகள் நாட்டுக்கோட்டை நகரப் பெரியார்களிடமே இருந்து வந்தது. காலப்போக்கில் 14 செப்ரம்பர் 1951இல் நாட்டுக்கோட்டை நகரத்தார் உளமகிழ்வுடனும் நல் இணக்கத்துடனும் திருப்பணிச் சபையாரிடம் பரிபாலனம் கைமாற்றப்பட்டது.

பொறுப்புக்கள் கையேற்கப்பட்ட காலம் முதல் அரிய பெரிய திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொழும்பு பழைய, புதிய கதிரேசன் கோயில் திருப்பணிச் சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் அறங்காவலர்களாகவும் (ஐவர்) பஞ்சாயத்தவர்களாகவும் நியமனம் பெற்று சபையை நடாத்திவரத் திருக்கேதீச்சரத் திருப்பணிப் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

இச்சபையின் தீர்மானப்படி காசிவாசி சிவஸ்ரீ ஈசான சிவாச்சாரியார், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம், கட்டடக்கலைஞர் வி.நரசிம்மன் ஆகியோரின் ஆகம விதிகளுக்கமைவான அறிவுறுத்தல்களுடன் தமிழ்நாடு திருவாளர்கள் செல்லக்கண்ணு ஸ்தபதியார், மு.வைத்தியநாத ஸ்தபதியார் ஆகியவர்களால் முறைப்படி சுவாமி, அம்பாள் கருவறைகள் கருங்கல்லாலும், சுதை, காரைகளாலும் விமான வேலைகளும் கோபுரங்களும் உலக சைவப்பெருமக்களின் பேருதவி கொண்டு அமைக்கப்பட்டது. இத்திருத்தலம் உருவாக அருள்வாக்கு நல்கிய நல்லூர் திருப்பெருந்திரு ஆறுமுகநாவர் ஐயா அவர்கள் “திருக்கேதீச்சரம் எனுந் தேன்பொந்து ஒன்று உளது. அங்கு மருந்தொன்று மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள்” என அருள்ஞானசம்பந்தர் சுட்டிக்காட்டியது போல அறிவுறுததருளினார்.

ஐயா அவர்களின் அறிவுறுத்தல் மேற்கொண்டு விடத்தல்தீவு வேலுப்பிள்ளை அவர்களும், முதல் குரல் கொடுத்த சைவபரிபாலன சபையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முன்பு ஆலயமிருக்கும் திருவிடத்தை சைவசமயத்தவர்கள் கையகப்படுத்த விரும்பாதநிலை மாறி மாவட்ட அதிபரின் முன்மொழிவுக்கமைய ஏலத்தில் விடப்பட்டு காடுமண்டிய நிலத்துடன் 43 ஏக்கர் 3 றூட் 33 பேச் காணி நாட்டுக்கோட்டை நகரத்துச் செம்மல் சைவச் சான்றாளர் ராம அரு.அரு.பழனியப்பச் செட்டுயாரான பெருமகனாரால் யாழ் செயலகத்தில் 3, 100/= ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டாமை சைவர்களின் பெருமைக்குரியதொன்றாயிற்று.

1894ஆம் ஆண்டு வண்ணைச் சைவப்பெரியார் சித.மு.பசுபதிச் செட்டியார், திருவாளர்கள் இ.இராமுப்பிள்ளை வைத்தியர் வை.ஆறுமுகம் பிள்ளை, தா.இராகவப்பிள்ளை ஆகியோரின் அயராத முயற்சியினால் 13 ஜூன் 1894 அன்று பழைய ஆலயம் இருந்த திருவிடமும், தீர்த்தக் கிணறும் முன் நிறுவப்பட்டிருந்த லிங்கம் ஒன்றும் திருநந்தி சோமாஸ்கந்தர், கணேசர் ஆகிய மூர்த்திகளின் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. இவற்றை நிறுவிப் பூசை அர்சனை அபிடேகங்கள் இயற்ற வேண்டி இன்றுள்ள கோயிலிருக்குமிடத்தில் சிறு கோயிலமைத்து கண்டெடுக்கப்பட்ட மூர்த்திகளை உரிய இடங்களில் நிறுவி 28 ஜூன் 1903 ஆம் ஆண்டில் நல்வேளையில் முதலாவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுச் சிறப்பாகச் செய்யப்பட்டது.

மூலக் கருவறையில் எழுந்தருள வைக்கப் பெற்ற சிவலிங்கம் காசியிலிருந்து வருவிக்கப்பட்டதென திரு இராமேச்சர வரலாற்றுத் தரவினாலறிய முடிகின்றது

இதனைத் தொடர்ந்து பல திருப்பணிகளாற்றப்பட்டு 1920ஆம் ஆண்டிலும் மற்றோர் திருக்குடமுழுக்கு விழாச் செய்யப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் காடடர்ந்து அழிந்த நிலைகண்டு நாட்டின் சைவப் பெருமக்களின் உள்ளத்தை விழிப்படைவும் பழைய உயர் நிலைக்குத் திருக்கோயில் வளரவும் வேண்டுமென்ற நினைப்பினாலும் உந்துதலினாலும் 1948 ஆம் ஆண்டு இத்திருவிடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினரால் சைவப் பெரு மாநாடொன்று கூட்டப்பட்டது. இம் மாநாட்டைக் கூட்ட முன்னின்று உழைத்த பெருமக்கள் வரிசையில் வேலைணையூர் வி.கே. செல்லப்பாச் சுவாமியார், திருவாசக முதல்வர் சி.சரவணமுத்து அடிகள், சட்டத்தரணி சு.சிவசுப்பிரமணியம் ஆகியோராவர்

கூடிய சைவப்பெருமாநாடு ஆலயத்தை மறுசீரமைத்து வளம்பல பெற வைக்க வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கத் தவறவில்லை. இம்மகாநாட்டைத் தொடர்ந்து பம்பலப்பிட்டி நகரத்தார் கதிரேசன் ஆலயத்தில் உருவாக்கப்பட்ட சபையே இன்றுலகளாவிய பெருமையுடன் திகழ்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.

இத்திருக்கோயிலில் 1952லும் 1960லும் ஆண்டிலும் திருவுருவப்படங்கள் நிறுவப்பட்டு இருமுறை குடமுழுக்காட்டப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முடிந்தவரை பல்வகைத் தொல்லைகட்காளாகிய நிலமையையும் பொருட்டாக நினைக்காது முயன்று தம்மையே ஈசற்கீந்து அரும்பாடுபட்டு இத்திருக்கோயிலை எடுத்த பெருமை சிவமணி சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களையும் மண்மேடாகவும் சேறாகவுமிருந்த பாலாவித் தீர்த்தக் குளத்தை வெட்டி அணையிட்டு செம்மையுறச் செய்திட்ட நீர்ப்பான பொறியியலாளர் அருளாளர் எஸ்.ஆறுமுகப் பெருந்தகையையும் சைவ உலகு என்றும் மறவாது

திருக்கேதீசரத்திற்குச் செல்லும் அடியவர்களின் வசதிகள் உளத்தில் கொண்ட அருளுள்ளத்தினர் பெருந்தனவந்தர்கள், அரச நிறுவனங்கள் ஆலயச் சூழலில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், நகரத்தார் மடம், நாவலர் மடம், அம்மா சத்திரம், திருப்பதி மடம், திருவாசக மடம், மகாசிவராத்திரி மடம், பொன்னாவெளி உடையார் மடம், நாதன் சத்திரம், மலேசியா மடம், கதிர்காமத் தொண்டர் மடம், மகாதுவட்டா மடம், பூனகரி மடம், அடியார் மடம், நீர்பாசன மடம், சிவபூசை மடம், நரசிங்கர் மடம், கட்டடத்திணைகள மடம் என பல்வேறு திருமடங்களை நிறுவி அடியார்கட்காறுதலளித்த பெருமைகளாயின.

அது மட்டுமா? ஒரு நகரத்தை அழகுசெய்வதற்குரிய மருந்தகம், மக்கள் நலம் பேணகம், ப.நோ.கூ. சங்கம், கி.மு.சங்கம், கி.அ.சங்கம், கிராமோதய சபை, நீர்வழங்கல் சபை, அஞ்சலகம், அங்காடிகள் போன்ற மிகமிக அவசியமான அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தமை கண்கூடு.

ஏதுங் குறையிவின்றி எல்லாமமைந்து தன்னிறைவு பெற்றிருந்த திருக்கோயிற் திருவிடம் திருக்கோயிலைத் தவிர்ந்த அனைத்து வளங்களும் அழிந்து போய் பழமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளமை உள நோவைத் தாராதிருக்கின்றது.

1976ஆம் ஆண்டு வெகு சிறப்புடன் திருக்கோயில் திருக்குடத் திருமுழுக்குப் பெருஞ்சாந்தி விழா நிகழ்த்தப் பெற்று 1990ஆம் ஆண்டுவரை நித்திய நைமித்திய பெருவிழாக்கள் நடைபெற்று வந்நதன

1990க்குப் பின் பூசையோ பெருவிழாக்களோ நடைபெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுக் காடு மண்டிக் களையிழந்து காட்சிதருவது கண்கூடு

இக்கால எல்லையில் ஐந்து திருத்தேர்கள் முயன்று உருவாக்கப்பட்டு வீதிவலம் வந்தகாட்சிதனை அருளடியார்கள் மறந்திருக்கமுடியாது. முதற்பெருந் தேரில் உலாவர உலகிலேயே பெரிய சோமாஸ்கந்த தெய்வத்திருவுருவம் வடிக்கப்பட்டு உலாவந்த காட்சி அருளாளர்களால் என்றும் மறக்ககமுடியாத காட்சியாகும்.

புதுமியான சிற்பங்களைக் கொண்ட திருக்கோயிலையுந் திருத்தேர்களையும் அமைத்த பெருமை தமிழ்நாடு மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி வினைஞர்களையும் பழனி சிற்பக்கலாவல்லுனர்களையும் யாழ் திருநெல்வேலி ஆறுமுகம் சீவரத்தினம் எனும் சிற்பக்கலா வல்லுனர்களையும் சார்ந்ததென்றால் அது மிகையாகாது.

இத்துணை சிறப்புக்கள் அமைந்ததாகவும், எந்தக்குறையுமில்லாத எல்லாமடங்கிய தன்னிறைவு பெற்ற பெருங்கோயிலாக அமைக்க வேண்டுமென்ற ஆர்வங்கொண்டு அல்லும் பகலும் கோயிலே தன் சிந்தையாகக் கொண்டு கோயில் பற்றிய தரவுகளைக் காட்டும் நூல்களை நுணுகி ஆராய்து சிவாகம நடைமுறை பிழையாது அமைத்திட நாளும் பொழுதும் சிந்திதிதுச் செயலாற்றிய ஆற்றி வருகின்ற சட்ட வல்லுனர் சைவப் பெரியார் இ.நமசிவாயம் அவர்தம் சேவையையும் அவருடன் உறுதுணையாய் பணியாற்றும் அன்பர்களின் பணிகளையும் நன்றியுள்ள சைவ உலகம் என்றும் மறாவதிருக்குமென நம்புவதில் தவறேது.

மருதனார்மட ஆஞ்சநேயர் கோயில் பற்றிய சிறப்பு தொகுப்பு !

யாழ்ப்பாணத்திலே மருதனார் மட சந்தியின் அண்மையில் வீதியின் மேற்கே கிழக்கு நோக்கிய நெடிய கோபுரத்துடன் 18 அடி உயர்ந்த மாருதி தேவன் நின்று அருளாட்சி செய்கின்ற திருத்தலமாகும். 22-04-1999 பிரமாதி வருட சித்திரை மாதம் 9 ஆம் திகதி வியாழக்கிழமை பூர்வ சப்தமித் திதியில் புனர் பூச நட்சத்திரத்தில் ஆலயம் அங்குராற்பணம் செய்யப்பட்டது. கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி என்பவரால் அத்திவாரம் இடப்பட்டது. 9 அடி உயரமான மூலவிக்கிரகத்தை ஒரே கருங்கல்லினால் இந்தியாவிலே ஆக்கி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. மூலஸ்தானம் திருமூர்த்தியால் கட்டப்பட்டது. இப்பணிக்கு இணுவில் அன்பர் ஓருவர் உதவினார். பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட விநாயகர் பரிவாரத் தெய்வமாக அமைவு பெற்றுள்ளது. கோயில் முன்பக்கத்திலே சனீஸ்வரன் கோயில் இணுவில் அடியவரான தனவந்தரால் நிறைவேற்றப்பட்டது.
The 72-foot Maruthanar Madam Anjanajar statue of the Hindu god Hanuman, just north of Jaffna. According to the Ramayana, Hanuman leapt from India to Sri Lanka in search of Sita.

இவ்வாலய வடிவமைப்பு வேலைகள் யாவும் சிற்பசாஸ்திரத்தில் சொல்லப்பட்டதற்கிணங்க 10-6 கோயிலாக அமைக்கப்பட்டது. சிற்பக்கலை நிபுணரால் செயற்கை மலைபோன்ற அமைப்பினை உருவாக்கி உள்ளமைப்பு 110அடி நீளமும் 56 அடி அகலமும் கொண்டதாக அமைவுபெற்றுள்ளது. கீழ்மண்டபம் கல்யாண மண்டபமாகவும், அன்னதான மண்டபமாகவும் உபயோகப் படக்கூடியவகையில் அமைவுபெற்றுள்ளது.

29-01-2001 தைத்திங்கள் காலை 8.30-10.30 உத்தரட்டாதி நட்சத்திரமும் பஞ்சமித்திதியும் சித்தயோகமும் கூடிய வேளையில் பெருமானுக்கு கும்பாபிஷேகம் இடம்பெற்றது. தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்றது. குhலை, மதியம், மாலை என மூன்று வேளைப்பூசைகள் இடம்பெற்று வருகின்றன. சனிக்கிழமைகளில் காலை 6மணிமுதல் மாலை 6 மணிவரை திருநடை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் அபிடேகம் நடைபெறுவது முக்கிய அம்சமாகும். மாமல்லபுரசிற்ப வல்லுனர் ஞானமூர்த்தியின் மனதிலே குடிகொண்ட அனுமன் கோபுர அமைப்ப முறையை கூற திருவருள்துணைக்கொண்டு செயற்பட முனைந்தார்.

 

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் ஷபத்தினித் தெய்யோ| என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இங்ஙனம் இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும் அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.

கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.

பெரிய வதிசயமுடனே
பேண்ணணங்கு மிலங்கை நண்ணி
சரியரிய வரங் கொடுத்துத்
தார்குழல் வற்றாப்பளையில்
மருவியிருந்த தருள் கொடுத்த
வளர்கதிரை மலையணுகி

கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.

அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய்பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் என்றும் அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.
வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.
கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.

முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை
முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்
பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு
தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.

அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
பாங்கான கண்களோ ராயிரமுண்டு…
……

எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்
பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர். கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.
இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. கைவாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.
தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது. பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதம் அடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.

வற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கி இருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர். முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். மேலும் விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்பபடுத்தப்படுவதை அவதானிக்கலாம். வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர். மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நமப்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால் வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.
தென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும் பொங்குதல், படைத்தல் என்னும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும் பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராக இருந்து ஆற்றி வருகின்றனர்.
இவ்வழிபாட்டு மரபில் சிலம்பு, பிரம்பு, அம்மானை, உடுக்கு முதலிய புனித சின்னங்களும் வெள்ளியால் அமைந்து ஷமுகபடாம்| என்னும் அமைப்பும் சித்திரச் சேலைகளும் இடம்பெறத் தொடங்கின. பக்தஞானி என்பவரே இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்று கூறப்படுகின்றது. கும்பத்தில் வெள்ளிமுக அமைப்பைப் பொருத்தி வெள்ளியாலான கைகால் என்பவற்றை முறைப்படி அமைத்து கண்ணகி அம்மனது உருவம் அமைக்கப்படும். இப்புனித சின்னங்களை அம்மனுக்குப் பூசை செய்யும் அந்தணர்கள் தங்களது பாதுகாப்பில் முள்ளியவளைக் கல்யாணவேலவர் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்திருந்த தமது இல்லத்தில் வைத்துப் பூசித்து வந்தனர். வெள்ளிதோறும் இல்லத்தில் பூசையும் திங்கட்கிழமைகளில் வற்றாப்பளைக் கோயிலில் பூசையும் நிகழ்ந்து வந்தன.
அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.
யாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலம் வத்தையிலும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர். வட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்கள் இருந்தபோதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.

இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.
சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார், பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.
கண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர். அவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது. இப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.
கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை. புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.
வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.
ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மிய திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.
கால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வர்.

http://vattappalaikannaki.com

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஆலயம்
அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர். முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.



காரணப் பெயர்
இவ்வாலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத்தொழிலையும் செய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.

நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச்சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக்கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக்கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை நாளைய தினம் பன்றி எச்சங்களையே புதைத்ததாகச் சொல்லச் சொன்னதாகவும், மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலையே கிடைத்ததாலும், தேவிக்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் ஏற்பட்டதாக மரபுரைகள் சொல்கின்றன. தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது “கிழவி’ எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.


ஆலய வளர்ச்சி
இந்த ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப் பெற்றதை நாம் அறிய முடிகிறது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றது. 1952இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது.

திருவிழாக்கள்
திருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூசை நடைபெறும்.யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே படைத்து வணங்குவார்கள். பொங்கல் தலமாகவும், தீர்த்தச்சிறப்பும், மூர்த்திப்பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

காலம் கணித்தறிய முடியாத பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென் கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534இல் போர்த்துக்கல் அரசனால் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையானது அவர்களின் வாழ்க்கையினை இறைவன் பக்கம் திருப்பியது. 1545 இல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரத கிறிஸ்தவர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இதனால் அச்சமூகத்தினரில் பலர் தமது தாயகத்தை விட்டு வெளியேறி பல தீவுகளில் குடியேறினர்.

இவர்களில் பலர் புங்குடுதீவின் தென்கீழ் முனையிலும் குடியேறினர். இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் இந்து ஆலயங்கள் மத்தியில் நடுநாயகமாக விளங்கும் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் வரலாறு நூறு வருடங்களுக்கு மேற்பட்டதாகும். ஆரம்பகால கட்டத்தில் சிறு ஆலயமாக உருவெடுத்து தற்பொழுது பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது. அந்நாளில் இந்தியாவில் கிறிஸ்தவ மக்களுக்கெதிரான போராட்டத்தில் பரத குல மக்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.


இக் கொடுமைகளை தாங்கமுடியாத மக்கள் தாயகத்தை விட்டு வெளியேறி கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கி இலங்கை வடபுலத்தில் உள்ள தீவுகளில் குடியேறினர். இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தரையிறங்கி தென்பகுதியில் குடியமர்ந்தனர். புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனைப்படி இறைவாழ்வு வாழ அவர்கள் தவறவில்லை. அவர்களின் ஜீவனோபாயமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு சிறப்புற வாழ்ந்தனர்.

இக் காலகட்டத்தில் தமது தொழில் நிமித்தம் கரையோரமாகச் சென்ற போது பேழை ஒன்று கரையில் ஒதுங்கி இருப்பதைக் கண்டு மகிழ்வுடன் அதை எடுத்துக் கொண்டு தம் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டனர். போகும் வழியில் தங்கள் பாதை மாறித் தீவின் மத்தியை அடைந்தார்கள்.

ஒரு ஆலமரம், பற்றை, புதர்கள் உள்ள காடாக இருந்த படியினால் ஆலமரத்தின் கீழ் இளைப்பாறினார்கள்.

தாங்கள் பாதை மாறி வந்ததை உணர்ந்த அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர ஆயத்தமாகி பேழையைத் தூக்கினார்கள். அவர்களால் அதை அசைக்க முடியவில்லை. அதனால் அவர்களுக்கு ஆச்சரியம் மேலிடவே உடனே பேழையை உடைத்தனர். அதனுள் புதுப்பொலிவுடன் ஜோதியாய் ஒளிவீசும் புனித சவேரியாரின் திருச்சுரூபம் இருக்கக் கண்டு மெய்சிலிர்த்தது. உடனே முழங்கால் படியிட்டுச் சுரூபத்தை வணங்கினர். பின் பேழையை ஆலமரத்தின் கீழே விட்டுவிட்டு வீடு சென்று சகலருக்கும் இச் செய்தியை அறிவித்தனர்.

பின்பு புனித பிரான்சிஸ் சவேரியார் தம்மை திருமறைக்கு திருப்பியதுமல்லாமல் கடல் கடந்த நாட்டிலும் தங்களுக்கு பாதுகாவலராக இருந்தார். இவரது திருச்சுரூபம் பெற்றதால் பரதகுல மக்கள் மகிழ்ந்ததுடன் தமது நன்றிப் பெருக்காகப் புனிதர்களுக்கு ஆலயம் அமைத்து வணங்கி வருகின்றனர். புனிதரின் திருச்சுரூபம் கிடைக்கப்பெற்றுப் பிரதிஸ்னம் அமைந்துள்ள அத்தினத்தையே வருடம் தோறும் வைகாசி மாதம் 20 ஆம் திகதி புனிதருக்கு விழா எடுக்கின்றனர்.


தற்பொழுது மக்கள் மீளக்குடியேறிய பின் சகல பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும் ஆலய புனரமைப்புப் பணிகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. ஆலயத்தின் சிறப்பைக் கேள்வியுற்ற வடமாகாண ஆயர் அதிமேதகு ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயகம் அங்கு விஜயம் மேற்கொண்டு ஆலயத்தைப் பார்வையிட்டுச் சென்றார். ஆலயத்திற்கு நிரந்தரப் பங்குத் தந்தையாக அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரை நியமித்தார்.

அவர் பல வழிகளிலும் பங்கு மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றி வருவதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் முயற்சி எடுத்து பாடசாலை முன்பள்ளி, கணினி வகுப்புகள், தையல் வகுப்புகள் ஆகிய துறைகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவித்து சேவையாற்றி வருகிறார்.
அத்துடன் தோமஸ் சவுந்தரநாயகம் கணினிப் பாடசாலை மேதகு ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயகத்தினாலே ஆரம்பித்து வைக்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

கோவிலின் கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தி முன்போர்ட்டிக்கோ, மணிக்கூட்டுக் கோபுரம் ஆகிய வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகிறது.

மூலம் – http://www.pungudutivu.org இணையம்.